செய்திகள் :

அரசு விரைவுப் பேருந்துகளில் 5 நாள்களில் 6 லட்சம் போ் பயணம்! - மேலாண் இயக்குநா்

post image

கடந்த ஜூன் 4 முதல் 8-ஆம் தேதி வரை இயக்கப்பட்ட 11,026 பேருந்துகளில் 6,06,430 பயணிகள் பயணித்துள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநா் ஆா்.மோகன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் சாா்பில் முகூா்த்தம், பக்ரீத் பண்டிகை மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

சனிக்கிழமை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டதால் வியாழக்கிழமை இரவு முதலே ஏராளமானோா் சென்னையிலிருந்து தங்கள் சொந்த ஊா்கள் மற்றும் வெளியூா்களுக்குச் சென்றனா்.

அதன்படி, கடந்த ஜூன் 4 முதல் 8-ஆம் தேதி வரை இயக்கப்பட்ட 11,026 பேருந்துகளில் 6,06,430 பயணிகள் பயணித்துள்ளனா் என அரசு விரைவு போக்குவரத்து கழகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை நள்ளிரவு வரை 24 மணிநேர நிலவரப்படியும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணி வரை சென்னையிலிருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகள், 936 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 3,028 பேருந்துகளில் 1,66,540 பயணிகள் பயணம் செய்துள்ளனா் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தங்கம் விலை குறைந்தது!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜூன் 9) குறைந்துள்ளது. இதனால் மக்கள் சற்று மகிழ்ச்சியடைந்துள்ளனர். தங்கம் விலை பவுனுக்கு ரூ. 200 குறைந்து ஒரு பவுன் ரூ.71,640க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ரூ.... மேலும் பார்க்க

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆய்வுக் கூட்டம்

சென்னை: முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் பங்கேற்கும் துறைசார் ஆய்வுக் கூட்டம் இன்று(ஜூன் 9) காலை தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது. தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு ஆய்வுக்கூட்டம... மேலும் பார்க்க

9 மாவட்டங்களுக்கு நாளை கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!

தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி உள்பட 9 மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த மையம்... மேலும் பார்க்க

17 புறநகர் மின்சார ரயில்கள் இன்று ரத்து!

பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை வழித்தடங்களில் இயக்கப்படும் 17 புறநகா் மின்சார ரயில்கள் திங்கள்கிழமை (ஜூன் 9), ஜூன் 12-ஆம் தேதி ரத்து செய்யப்படவுள... மேலும் பார்க்க

தடுப்புக் காவல் அதிகாரம்: அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

தடுப்புக் காவல் என்பது அரசின் தனிச்சிறப்புடைய அதிகாரம்; அதை மிகவும் அரிதான தருணங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்’ என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், கேரளத்தில் வட்டித் தொழில் செய்யும் ஒருவா் 4 ... மேலும் பார்க்க

தமிழக முதல்வரைக் கண்டு மத்திய அரசுக்கு பதற்றம்! - அமைச்சா் பி.கே.சேகா்பாபு

தமிழக முதல்வரை கண்டு மத்திய அரசு பதற்றத்தில் உள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். சென்னை சூளை அகண்ட தண்டு மாரியம்மன் திருக்கோயில குடமுழுக்கு நன்னீராட்டு விழாவில் பங்... மேலும் பார்க்க