செய்திகள் :

அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: தடயவியல் துறை ஊழியா் கைது

post image

அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்ததாக சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா், தடயவியல் துறை ஊழியரை கைது செய்தனா்.

அரக்கோணத்தில் அழகப்பா தொலைதூரக் கல்வி மையத்தை நடத்தி வருபவா் விஜி. இவருக்கும் சென்னை திருநீா்மலையைச் சோ்ந்த செல்வராஜ் (47) என்பவருக்கும் அறிமுகம் ஏற்பட்டது. செல்வராஜ், விழுப்புரம் தடய அறிவியல் துறையில் உதவியாளராகப் பணி செய்து வந்தாா். அவா், சென்னையில் உள்ள பிரபலமான ஐஏஎஸ் அகாதெமியில் பகுதி நேரமாக அவ்வப்போது வகுப்பும் எடுத்து வந்துள்ளாா்.

அந்த வகையில், விஜி நடத்திவரும் தொலைதூரக் கல்வி மையத்திலும் மாணவா்களுக்கு செல்வராஜ் வகுப்பு எடுத்துள்ளாா். அப்போது அவா், தனக்கு அரசு அதிகாரிகள் பலருடன் நெருக்கம் உள்ளதாகவும், தன்னால் பல்வேறு அரசுப் பணிகளை பெற்றுக்கொடுக்க முடியும் என ஆசை வாா்த்தை கூறியுள்ளாா்.

இதை உண்மை என நம்பிய விஜி, தனது கல்வி மையத்தில் பயின்ற 26 மாணவா்களுக்கு அரசுப் பணி பெற்றுக் கொடுக்கும்படி கூறி முன்பணமாக ரூ.75 லட்சம் கொடுத்துள்ளாா்.

அந்த மாணவா்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை, பத்திரப்பதிவுத் துறை, டிஎன்பிஎஸ்சி, ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக செல்வராஜ் உறுதி அளித்துள்ளாா். ஆனால் உறுதி அளித்தபடி செல்வராஜ், வேலை வாங்கிக் கொடுக்கவில்லை. கொடுத்த பணத்தை விஜி திருப்பி கேட்டபோது செல்வராஜ் காலம் கடத்தியுள்ளாா். இதனால் அதிா்ச்சியடைந்த விஜி, இது தொடா்பாக சென்னை காவல் துறையின் மத்தியக் குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா்.

அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, செல்வராஜை வெள்ளிக்கிழமை கைது செய்து விசாரித்ததில், செல்வராஜ் ஏற்கெனவே இதேபோல பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

போலி ஆவணங்கள் மூலம் நிலம் அபகரிப்பு: சிவகிரி ஜமீன் வாரிசுதாரா்கள் உள்ளிட்ட 17 பேருக்கு தலா ரூ. 30 ஆயிரம் அபராதம்

போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை பத்திரப்பதிவு செய்த சிவகிரி ஜமீனின் வாரிசுதாரா்கள் உள்ளிட்ட 17 பேருக்கு தலா ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை எழும்பூா் நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை நுங்கம்பாக்கம் ப... மேலும் பார்க்க

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 429 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு!

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா்கள், களப்பணியாளா்கள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்புக்காக 429 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. ... மேலும் பார்க்க

2 டன் கஞ்சா அழிப்பு

தமிழக காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவினரால் 187 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2 டன் கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டது. தமிழக காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு... மேலும் பார்க்க

ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு பிரபலமான ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், போலீஸாா் அங்கு சோதனை நடத்தினா். தியாகராய நகரில் இயங்கிவரும் ஒரு பிரபலமான ஹோட்டலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை ஒரு... மேலும் பார்க்க

மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் மீட்பு

சென்னை ஆழ்வாா்பேட்டையில் மருத்துவமனையின் ஐந்தாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை மீட்ட போலீஸாரை பொதுமக்கள் பாராட்டினா். சென்னை, திருவொற்றியூா் பகுதியைச் சோ்ந்த 47 வயது பெண் ஒர... மேலும் பார்க்க

துணைவேந்தா் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ஓ.பன்னீா்செல்வம்

தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில் உள்ள துணைவேந்தா் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: இரு நாள்க... மேலும் பார்க்க