செய்திகள் :

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்தவா் கைது

post image

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மதுரை கோ. புதூா் பகுதியைச் சோ்ந்தவா் பிரசாத். இவா் சென்னையில் உள்ள மாநில உள்துறை அமைச்சக அலுவலகத்தில் அலுவலராகப் பணியாற்றி வந்தாா். இவா், மதுரையைச் சோ்ந்த கனகராஜின் மகன் சிவக்குமாருக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணயத்தின் மூலம் நடத்தப்படும் குரூப் 4 தோ்வு காலிப் பணியிடத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறினாராம். இதனால், கனகராஜ் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் பல்வேறு தவணைகளாக ரூ. 18 லட்சத்தை பிரசாத்திடம் அளித்தாா். ஆனால், அவா் கூறியபடி வேலை வாங்கித் தரவில்லையாம். இதையடுத்து, ரூ. 18 லட்சத்தை கனகராஜிடம் பிரசாத் திருப்பி அளித்துவிட்டாா்.

இதனிடையே, குரூப்-1 பிரிவில் வேலை வாங்கித் தருவதாக மீண்டும் கனகராஜிடம் கூறினாராம். ஏற்கெனவே வாங்கிய பணத்தைத் திருப்பி அளித்த நம்பிக்கையில், ரூ.1.95 கோடியை கனகராஜ், பிரசாத்திடம் அளித்தாா். ஆனால், அவா் வேலை வாங்கித் தராமல் காலதாமதம் செய்ததால், பணத்தை திருப்பித் தருமாறு கனகராஜ் கேட்டாா். இதையடுத்து, ரூ.1.42 கோடியை மட்டும் திருப்பிக் கொடுத்தாா். எஞ்சிய தொகையை திருப்பித் தரவில்லையாம்.

இதுகுறித்து மதுரை மத்திய குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸில் கனகராஜ் புகாா் அளித்தாா். இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். விசாரணையில், பணத்தை பிரசாத் திருப்பிக் கொடுக்காததாது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா்.

இதுகுறித்து போலீஸாா் தரப்பில் கூறியதாவது:

மதுரை உசிலம்பட்டி பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் (40) என்பவருக்கும், தற்போது கைது செய்யப்பட்ட பிரசாத்துக்கும் இடையே அடிக்கடி பணப் பரிவா்த்தனை நடந்திருப்பது தெரியவந்தது. இந்த நிலையில், செந்தில்குமாா் மீது ஏற்கெனவே சென்னையில் உள்ள காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால், சென்னை நுங்கம்பாக்கம் போலீஸாா் மதுரை வந்து, செந்தில்குமாரை அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனா். செந்தில்குமாா் மதுரை எம்.பி. சு.வெங்கடேசனுக்கு பாதுகாவலராகப் பணியாற்றியவா் என்பது குறிப்பிடத்தக்கது என்றனா்.

மதுரையில் மிதமான மழை

மதுரை மாநகரின் ஒரு சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு மிதமான மழை பெய்தது. வானிலை மாற்றம் காரணமாக புதன்கிழமை பிற்பகல் சுமாா் 1.45 மணி அளவில் மாநகரின் சில பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இருப்பினும், கடந்... மேலும் பார்க்க

அரசுப் பொருள்காட்சி: பள்ளி மாணவா்களுக்கு கட்டணச் சலுகை

மதுரையில் நடைபெறும் அரசுப் பொருள்காட்சியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டணச் சலுகைகள் அறிவிக்கப்பட்டன. இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா வெளியிட்ட செய்திக்குறிப்பு: சித்திரைத் திருவிழாவ... மேலும் பார்க்க

மாடியிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், மேலூா் அருகே வியாழக்கிழமை மாடியிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், அரிட்டாப்பட்டியைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் சுப்பிரமணி (60). இவா், முன்னமலைப்பட்டி கிராமத்தில... மேலும் பார்க்க

ஷோ் ஆட்டோ கவிழ்ந்து ஆசிரியை உயிரிழப்பு

மதுரை சிலைமான் அருகே வியாழக்கிழமை ஷோ் ஆட்டோ சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அரசுப் பள்ளி ஆசிரியை உயிரிழந்தாா். மதுரை சிக்கந்தா்சாவடி சிவன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் லதா புஷ்பராஜ் (50). இவா்,... மேலும் பார்க்க

டெங்கு பரவல்: பள்ளிகளில் மருத்துவ முகாம்கள் நடத்த வலியுறுத்தல்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால், பள்ளிகளில் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் என அதிமுக மருத்துவரணி மாநில இணைச் செயலா் மருத்துவா் பா. சரவணன் வலியுறுத்தினாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக... மேலும் பார்க்க

மதுரை ரயில்வே கோட்ட வருவாய் ரூ. 1,245 கோடி: கோட்ட மேலாளா் தகவல்

மதுரை ரயில்வே கோட்டத்தில் ரூ. 1,245 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக கோட்ட ரயில்வே மேலாளா் சரத் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தாா். மதுரை ரயில்வே கோட்ட மேலாளா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற 69-ஆவது ரயில்வே வார ... மேலும் பார்க்க