செய்திகள் :

அருணாசல் நெடுஞ்சாலை திட்டம் விரைவில் நிறைவடையும்: கிரண் ரிஜிஜு

post image

அருணாச்சலப் பிரதேசத்தின் அனைத்து மாவட்டங்களையும் இணைக்கும் நெடுஞ்சாலை திட்டம் விரைவில் நிறைவடையும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

கம்லே மாவட்டத்தில் உள்ள போசிம்லாவில் நியிஷி பழங்குடியினரின் விழாவான நியோகுமு யூல்லோ முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கரும் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் கிரண் ரிஜிஜு கூறுகையில்,

மாநிலத்தின் 26 மாவட்டத் தலைமையகங்களையும் இணைக்கும் அருணாசல் நெடுஞ்சாலை நிறைவடையும் தறுவாயில் உள்ளது.

இது மாநிலத்தின் அனைத்து மாவட்டத் தலைமையகங்களையும் தடையின்றி இணைக்கும், அணுகலை மேம்படுத்தும் மற்றும் வளர்ச்சியை அதிகரிக்கும்.

சுமார் ரூ.42,000 கோடி மதிப்பில் கட்டப்படும் மிகப்பெரிய நெடுஞ்சாலை திட்டம், இந்தியாவில் மிகப்பெரியளவிலான முதல் திட்டமும் இதுவேயாகும் என்று அவர் கூறினார்.

மகா கும்பமேளா கோலாகலமாக நிறைவு: 65 கோடி பேர் பங்கேற்பு!

பிரயாக்ராஜ் : நிகழாண்டின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா இன்று(பிப். 26) நிறைவடைந்தது.பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புனித நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்தில் விமர்சையாக நடைபெற்று வ... மேலும் பார்க்க

தங்கம் இறக்குமதியில் சரிவு!

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவில் தங்கத்தின் இறக்குமதி குறைந்துள்ளது.ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் அளவு, கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் குறைந்துள்ளது. கடந்தா... மேலும் பார்க்க

குழந்தைகளைத் தேரில் இருந்து தூக்கி வீசும் விநோத சடங்கு? தடை செய்ய கோரிக்கை!

பெங்களூரு : அண்டை மாநிலமான கர்நாடகத்தில் குழந்தைகளைத் தேரில் இருந்து கீழே தூக்கி வீசும் விநோத நேர்த்திக்கடன் வழிபாட்டு முறைக்கு தடை செய்ய கோரிக்கை வலுத்துள்ளது.காடிவாடிகியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்... மேலும் பார்க்க

தெலங்கானா சுரங்க விபத்து: மோப்ப நாய் உதவியை நாடும் மீட்புக் குழு!

தெலுங்கானா சுரங்க விபத்தில் சிக்கியவர்களை மீட்க மோப்ப நாய்களைப் பயன்படுத்த மீட்புக் குழு முடிவு செய்துள்ளது.தெலங்கானாவின் நாகா்குர்னூல் மாவட்டத்தில் சுரங்கம் அமைக்கும் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் சி... மேலும் பார்க்க

அரசுப்பேருந்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை: பாஜக அரசுக்கு எதிராக மகாராஷ்டிரத்தில் போராட்டம்!

புணே : மகாராஷ்டிரத்தில் அரசுப் பேருந்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 26 வயது இளம்பெண் ஒருவர் புணேயில் ஆள்நடமாட்டம் மிகுந்து காணப்படும் ... மேலும் பார்க்க

ரஷியா செல்லும் பிரதமர் மோடி?

ரஷியாவில் நடைபெறவிருக்கும் இரண்டாம் உலகப் போர் வெற்றி விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இரண்டாம் உலகப் போரின் 80 ஆம் ஆண்டு வெற்றி விழா, ரஷியாவின் மாஸ்கோ நகரி... மேலும் பார்க்க