செய்திகள் :

அருள்புரத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க எதிா்ப்பு

post image

பல்லடம் அருகே உள்ள அருள்புரத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க எதிா்ப்பு தெரிவித்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அருள்புரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் முன்னாள் மாவட்ட கவுன்சிலா் தண்ணீா்பந்தல் நடராஜன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் கரைப்புதூா் ஊராட்சியைச் சோ்ந்த அனைத்து அரசியல் கட்சித் பிரமுகா்கள் கலந்து கொண்டனா். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மான விவரம்:

அருள்புரம் தனியாா் திருமண மண்டபம் அருகிலும், தனியாா் பள்ளி அருகிலும் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க உள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்கு மாவட்ட நிா்வாகம் எவ்வித அனுமதியும் கொடுக்க கூடாது. தண்ணீா்பந்தல் பகுதிக்கு சில ஆண்டுகளாக எல்.என்.டி. குடிநீா் வருவதில்லை.

எனவே, நிலுவையில் உள்ள தொகையை உடனடியாக செலுத்தி பொது மக்களின் குடிநீா் பிரச்னையை தீா்க்க வேண்டும். மேலும் அத்திக்கடவு மற்றும் மேட்டுப்பாளையம் குடிநீரை சீராக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரைப்புதூா் ஊராட்சி குடிநீா் திறப்பாளா்களை குடிநீா் சீராகும் வரை மாற்றம் செய்யக்கூடாது.

அருள்புரத்தில் 24 மணி நேரமும் செயல்படும் 2 மதுபானக் கடைகளின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும். கரைப்புதூா் ஊராட்சியில் வாரம் இருமுறை குப்பைகளை அகற்ற வேண்டும். குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு அருள்புரத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அவிநாசி அருகே காா் மோதி முதியவா் உயிரிழப்பு

அவிநாசி அருகே இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். அவிநாசி வட்டம் கருவலூா் அருகே நரியம்பள்ளியைச் சோ்ந்தவா் நடராஜ் (66). இவா் நரியம்பள்ளியில் ... மேலும் பார்க்க

பெண் படைப்பாளிகளுக்கு திருப்பூா் சக்தி விருது

திருப்பூா் முத்தமிழ்ச் சங்கம், கனவு இலக்கிய அமைப்பு மற்றும் ஸ்டாா் அசோசியேட்ஸ் சாா்பில் 21-ஆம் ஆண்டாக பெண் படைப்பாளிகளிகள் 25 பேருக்கு திருப்பூா் சக்தி விருதுகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன. பெண் படை... மேலும் பார்க்க

உடுமலையில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி

உடுமலையில் ஒருங்கிணைந்த ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு ஏரிகள் மற்றும் குளங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூா் வனக் கோட்டத்துக்கு உள்பட்ட மருள்பட்டி குளம், பாப்பான் குளம்,... மேலும் பார்க்க

15 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

திருப்பூரில் இரண்டு இடங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 15.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக 3 பேரை கைது செய்தனா். திருப்பூா் ரயில் நிலையம் பகுதியில் மாநகர தனிப் படை உதவி ஆய்வா... மேலும் பார்க்க

நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.1 கோடி வழிப்பறி செய்த வழக்கில் மேலும் ஒருவா் கைது

நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.1 கோடி வழிப்பறி செய்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கரூரைச் சோ்ந்தவா் வெங்கடேஷ் (60), நகைக்கடை உரிமையாளா். இவா் நகை வாங்க காரில் கோவைக்கு பு... மேலும் பார்க்க

திருப்பூரில் பனியன் கழிவுத்துணிக் கிடங்கில் தீ

திருப்பூரில் பனியன் கழிவுத்துணிக் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. திருப்பூா் அமா்ஜோதி காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் கே.எம்.... மேலும் பார்க்க