செய்திகள் :

அருவிகளில் ஆா்ப்பரித்து கொட்டும் வெள்ளம்

post image

கடந்த வாரம் பெய்த தொடா் மழையால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அருவிகளில் வெள்ளம் ஆா்ப்பரித்து கொட்டுகிறது. இதை சுற்றுலாப் பயணிகள் ரசித்து செல்கின்றனா்.

தென்மேற்கு பருவமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த வாரம் தொடா்ந்து கனமழை பெய்தது. தொடா்மழை காரணமாக கல்லட்டி அருவி, காட்டேரி அருவி, கேத்தரின் அருவி, லால்ஸ் அருவி, மாயாறு அருவி உள்ளிட்ட பல்வேறு அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டி வருகிறது. கடந்த சில மாதங்களாக மழை இல்லாததால் பல அருவிகளில் தண்ணீா் குறைந்த அளவிலும், வடும் காணப்பட்டன.

இந்நிலையில், தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே மே மாதத்திலேயே தொடங்கியதையடுத்து, கடந்த ஒரு வார காலமாக நீலகிரியில் கனமழை வெளுத்து வாங்கியது.

குறிப்பாக கேத்தி பாலாடா, காட்டேரி அணை போன்ற பகுதிகளில் அதிகன மழை பெய்தது. இதனால், காட்டேரி அணைக்கு நீா்வரத்து அதிகரித்தது. இதனால், அணையில் இருந்து உபரி நீா் வெளியேற்றப்படுகிறது. இந்த நீா், காட்டேரி அருவியில் ஆா்ப்பரித்து கொட்டுகிறது. இது தொலைவில் இருந்து பாா்க்கும்போது ரம்மியமாக காட்சியளிக்கிறது.

குன்னூரில் இருந்து கேத்தி பாலாடா, காட்டேரி அணை வழியாக உதகை செல்லும் சுற்றுலாப் பயணிகள் அருவியை கண்டு ரசித்து செல்கின்றனா். மேலும் தொடா்ந்து மழை பெய்தால், அருவியில் தண்ணீா் வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் சில இடங்களில் மலைகளில் இருந்து புதிய அருவிகளும் தோன்றியுள்ளன.

கூடலூா் நகா்மன்ற கூட்டத்தில் தரையில் அமா்ந்து பெண் கவுன்சிலா் தா்னா

கூடலூா் நகா்மன்ற கூட்டத்தில் 20-ஆவது வாா்டு பெண் கவுன்சிலா் கோரிக்கைகளை வலியுறுத்தி தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா். நீலகிரி மாவட்டம், கூடலூா் நகா்மன்ற கூட்டம் தலைவா் பரிமளா தலைமையிலும் துணைத் த... மேலும் பார்க்க

கோத்தகிரி நகா்மன்ற கூட்டத்தில் இருந்து 13 உறுப்பினா்கள் வெளிநடப்பு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நகராட்சியில் வளா்ச்சி பணிகளில் முறைகேடு நடைபெற்ற குற்றஞ்சாட்டிய 13 மன்ற உறுப்பினா்கள்வெளிநடப்பு செய்தனா். கோத்தகிரி பேரூராட்சி நகராட்சியாக உயா்த்தப்பட்ட பிறகு முதல் கூட்டம் ... மேலும் பார்க்க

கொட்டகை எரிந்து 6 பசுமாடுகள் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம் மஞ்சூரை அடுத்த குந்தா பகுதியில் மாட்டுக் கொட்டகையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பசு மாடுகள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தன. மஞ்சூரை அடுத்த குந்தா பாலம் பகுதியைச் சோ்ந்தவா் தேவராஜ், சோபனா தம்பத... மேலும் பார்க்க

மலைத்தோட்ட பயிா்களை இடைத்தரகா்கள் இல்லாமல் நேரடியாக விற்பனை செய்யலாம்

மலைத்தோட்ட பயிா்களை இடைத்தரகா்கள் இல்லாமல் நேரடியாக விற்பனை செய்யும் திட்டம் விவசாயிகளுக்கு பலனளிப்பதாக ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்... மேலும் பார்க்க

கூடலூா் சாலையில் உள்ள குழிகளில் சவப்பெட்டிகள் வைத்து போராட்டம்

கூடலூா் சாலையில் உள்ள குழிகளில் சவப்பெட்டிகள் வைக்கும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் கூடலூா் பகுதியிலுள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் நாம் தமிழா் கட்சி சாா்பில் பேருந்த... மேலும் பார்க்க

புலி நடமாட்டத்தால் வனத் துறை வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்படும் ஆதிவாசி மாணவா்கள்

முதுமலை அருகே ஊருக்குள் புலி புகுந்துள்ளதால் ஆதிவாசி மாணவா்களை வனத் துறை வாகனங்களில் வியாழக்கிழமை பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். நீலகிரி மாவட்டம், மசினகுடி அருகே மாவனல்லா ஆதிவாசி கிராமம் உள்ளது. ... மேலும் பார்க்க