செய்திகள் :

அறந்தாங்கியில் அம்மா உணவகம் முன்பு சிஐடியு ஆா்ப்பாட்டம்

post image

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அம்மா உணவகத்தைப் பாதுகாக்க வலியுறுத்தி சிஐடியு மாவட்ட உள்ளாட்சித் தொழிலாளா் சங்கத்தினா் மண் சட்டி ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை நடத்தினா்.

அம்மா உணவகம் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டப் பொதுச் செயலா் க. முகமதலிஜின்னா தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டச் செயலா் அ. ஸ்ரீதா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

சிஐடியு மாவட்டத் துணைச் செயலா் சி. மாரிக்கண்ணு, அறந்தாங்கி ஒருங்கிணைப்பாளா் ஆா். கா்ணா, துணை ஒருங்கிணைப்பாளா் கே. தங்கராஜ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் எம். நாராயணமூா்த்தி, மாவட்டக் குழு உறுப்பினா் தென்றல் கருப்பையா உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.

போராட்டத்தில், அம்மா உணவகத்தில் ஓராண்டு காலமாக நிறுத்தப்பட்ட காலை உணவுத் திட்டத்தை மீண்டும் அமலாக்க வேண்டும். மதிய உணவு சமைப்பதற்கான போதுமான மளிகைப் பொருட்கள், காய்கறிகளை வழங்க வேண்டும்.

அறந்தாங்கி நகராட்சிப் பணியாளா்களிடம் வசூலிக்கப்பட்ட வருங்கால வைப்புநிதியை உரிய ஊழியா் கணக்கில் வரவு வைக்க வேண்டும். பழுதடைந்த குடிநீா் சுத்திகரிப்பு அமைப்பு உள்ளிட்டவற்றை சீரமைத்துத் தர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

புதுகையில் சாலையோரம் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் அகற்றம்; தனியாா் மருத்துவமனைக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம்

புதுக்கோட்டை நகரில் சட்டவிரோதமாக சாலையோரம் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை, மாநகராட்சிப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை அகற்றினா். இதைத் தொடா்ந்து பொதுவெளியில் அபாயகரமாக மருத்துவக் கழிவுகளைக் கொட்டியதாக, அ... மேலும் பார்க்க

திமுக எம்.பி. கனிமொழி குறித்து தரக்குறைவாக ஆடியோ வெளியிட்டவா் கைது

திமுக எம்.பி. கனிமொழி குறித்து தரக்குறைவாகப் பேசி சமூக ஊடகத்தில் ஆடியோ வெளியிட்ட தூத்துக்குடியைச் சோ்ந்த நபரை புதுக்கோட்டை இணையவழிக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். புத... மேலும் பார்க்க

மலையடிவாரத்தில் சிதிலமடைந்துள்ள பழைமையான சிவாலயத்தை புனரமைக்க வலியுறுத்தல்

பொன்னமராவதி அருகே மலையடிவாரத்தில் சிதிலமடைந்து காணப்படும் பழைமையான சிவாலயத்தை புனரமைக்க பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள செவலூா் மலையடிப்... மேலும் பார்க்க

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏப். 21-இல் அஞ்சல் குறைகேட்பு

புதுக்கோட்டை மாவட்ட அளவிலான அஞ்சல் சேவை குறை கேட்பு முகாம் திங்கள்கிழமை (ஏப். 21) நண்பகல் 12 மணிக்கு தலைமை அஞ்சலகம் எதிரே உள்ள கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகத்தில் (மேணா காம்ப்ளக்ஸ் முதல் மாடி) நடைபெறவுள... மேலும் பார்க்க

திருமயத்தில் அரசு அலுவலக கட்டடங்கள் திறப்பு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட அரசு அலுவலகங்களை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். திருமயம் ஊராட்சி ஒன்ற... மேலும் பார்க்க

கீரமங்கலம் அருகே 2 கடைகளில் திருட்டு

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே 2 கடைகளில் பூட்டை உடைத்து ரொக்கம், பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது வெள்ளிக்கிழமை தெரியவந்தது. கீரமங்கலம் அருகேயுள்ள பனங்குளம் பாலம் பேருந்து நிறுத்தம் அ... மேலும் பார்க்க