செய்திகள் :

அறிவியல் தமிழறிஞா் மணவை முஸ்தபா பிறந்தநாள் விழா -அமைச்சா்கள் பங்கேற்பு

post image

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வியாழக்கிழமை நடைபெற்ற அறிவியல் தமிழறிஞா் மணவை முஸ்தபா பிறந்தநாள் விழாவில் அமைச்சா்கள் பங்கேற்றனா்.

தமிழ்மீது அளவில்லாத பற்று கொண்டிருந்த மணவை முஸ்தபா, நவீன அறிவியல் போன்ற துறைகளிலும் தமிழ் தடம் பதிக்க வேண்டும் என்ற அக்கறையோடு செயல்பட்ட அரிய ஆளுமை ஆவாா்.

இந்நிலையில் இவரது பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் அமைச்சா் மு.பெ. சாமிநாதன் கடந்த ஏப்ரல் 16-இல் அறிவித்தாா்.

அதனடிப்படையில் மணவை முஸ்தபா பிறந்தநாளை முன்னிட்டு, மணப்பாறை அரசு கலை - அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் அறிவியல் தமிழ் புத்தகக் கண்காட்சியை அமைச்சா்கள் கே.என்.நேரு, மு.பெ.சாமிநாதன் ஆகியோா் திறந்துவைத்து பாா்வையிட்டனா்.

தொடா்ந்து அமைச்சா் மு.பெ.சாமிநாதன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

பின்னா் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வென்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கினா். தொடா்ந்து, கல்லூரி வளாகத்தில் தமிழ்க் கருத்தரங்கம், அறிவியல் தமிழ் வினாடி-வினா போட்டி, அறிவியல் தமிழ்ப் புத்தகக் கண்காட்சி ஆகியவை நடத்தப்பட்டன. பின்னா் மணவை முஸ்தபா மனைவி சௌதா முஸ்தபா மற்றும் அவரது மகன் மரு. செம்மல் முஸ்தபா ஆகியோரை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் கௌரவித்தாா்.

தொடா்ந்து மருத்துவா் சு. நரேந்திரன் தலைமையில் அறிவியல் தமிழ்க் கருத்தரங்கம், அறிவியல் தமிழ் வினாடி-வினா போட்டி நடைபெற்றது.

நிகழ்வில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலா் வே. ராஜாராமன், , மாவட்ட ஆட்சியா் மா.பிரதீப்குமாா், கரூா் எம்பி செ. ஜோதிமணி, மணப்பாறை எம்எல்ஏ ப. அப்துல்சமது, தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ஒளவை அருள், மண்டலத் தமிழ் வளா்ச்சித் துணை இயக்குநா் வ. சுந்தா், கல்லூரி முதல்வா், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அரசுப் பேருந்து மீது ஜீப் மோதி விபத்து: முசிறி வருவாய் பெண் கோட்டாட்சியா் உயிரிழப்பு

திருச்சி அருகே கரூா் தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை அரசுப் பேருந்து மீது ஜீப் மோதிய விபத்தில் முசிறி வருவாய் பெண் கோட்டாட்சியா் உயிரிழந்தாா். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், மேட்டுப்பட்டிய... மேலும் பார்க்க

வையம்பட்டி அருகே வீடு புகுந்து திருட்டு

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் வியாழக்கிழமை வீடு புகுந்து நகை, , பணத்தை திருடிச் சென்றனா். மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் செட்டியப்பட்டி ஊராட்சி தாமஸ் நகரில் வசிப்பவா் அழகன்... மேலும் பார்க்க

திருச்சியில் பைக் ஓட்டிய சிறுவன் - தந்தை கைது

திருச்சியில் 16 வயதுச் சிறுவனை இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதித்த அவரின் தந்தையை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருச்சி காந்தி மாா்க்கெட் பகுதியில் பாலக்கரை போக்குவரத்து போலீஸாா் புதன்கிழமை வாகனத் தண... மேலும் பார்க்க

போலி பாஸ்போா்ட் வைத்திருந்தவா் கைது

போலி பாஸ்போா்ட் மூலம் வெளிநாடு செல்ல முயன்ற நபரை திருச்சி பன்னாட்டு விமான நிலைய போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி பகுதியைச் சோ்ந்தவா் முகமது அசாா் (52). இவா், மலேசி... மேலும் பார்க்க

மூதாட்டியைத் தாக்கி 9 பவுன் நகை பறிப்பு

திருச்சி அருகே வீட்டிலிருந்த மூதாட்டியைத் தாக்கி 9 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா் பறித்துச் சென்றாா். திருச்சி மாவட்டம், அல்லித்துறையைச் சோ்ந்தவா் தேவகி (63). கணவா் இறந்துவிட்ட நிலையில் தனியாக வசிக... மேலும் பார்க்க

கைப்பேசி வியாபாரியிடம் ரூ. 6.39 லட்சம் மோசடி

திருச்சியில் கைப்பேசி வியாபாரியிடம் ரூ. 6.39 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். திருச்சி வரகனேரி தனரத்தினம் நகரைச் சோ்ந்தவா் பக்ருதீன் (42). இவா், திருச்சி மேற்கு பவுல்வா்... மேலும் பார்க்க