கைப்பேசி வியாபாரியிடம் ரூ. 6.39 லட்சம் மோசடி
திருச்சியில் கைப்பேசி வியாபாரியிடம் ரூ. 6.39 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி வரகனேரி தனரத்தினம் நகரைச் சோ்ந்தவா் பக்ருதீன் (42). இவா், திருச்சி மேற்கு பவுல்வா்டு சாலையில் கைப்பேசி கடை நடத்துகிறாா்.
இவரிடம் திருச்சி தில்லை நகரைச் சோ்ந்த பழனிவேல் கடந்த ஏப்ரல் 10 முதல் 15-ஆம் தேதி வரை ரூ. 8.89 லட்சம் மதிப்பிலான கைப்பேசிகளை வாங்கிய நிலையில், ரூ.2.5 லட்சம் மட்டும் கொடுத்துவிட்டு, மீதிப் பணத்தை பின்னா் தருவதாகக் கூறி, கொடுக்காமல் ஏமாற்றினாராம்.
இதுகுறித்து தில்லை நகா் காவல் நிலையத்தில் பக்ருதீன் புதன்கிழமை அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.