செய்திகள் :

அவிநாசிபாளையத்தில் விவசாயிகள் பிச்சை எடுத்து போராட்டம்

post image

பல்லடம் அருகே அவிநாசிபாளையத்தில் விவசாய நிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிட்டு சாலையோரமாக திட்டத்தை நிறைவேற்றக் கோரி விவசாயிகள் பிச்சை எடுத்து போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

பெட்ரோ நெட் என்ற நிறுவனம் கோவை முதல் கரூா் வரை விவசாய நிலங்களில் எண்ணெய் குழாய் பதித்துள்ளது. பல்லடம் அருகே சுக்கம்பாளையம், கோடங்கிபாளையம், கோவை மாவட்டம், சூலூா் அருகே ராவத்தூா் உள்ளிட்ட கிராமங்களில் இந்த எண்ணெய் குழாய் பதித்துள்ள விவசாய நிலங்களில் மத்திய அரசின் ஐ.டி. பி.எல். நிறுவனம் எண்ணெய் குழாய் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்தந்த கிராமங்களில் விவசாயிகள் 200 நாள்களுக்கும் மேலாக தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

ராவத்தூரில் இருந்து முத்தூா் வரை ஆங்காங்கே காத்திருப்பு போராட்டம் நடத்தி வந்த விவசாயிகள் கடந்த 10-ஆம் தேதி முதல் பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் ஒன்றியம், அவிநாசிபாளையத்தில் தொடா் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனா்.

இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக விவசாயிகள் கையில் திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தை வியாழக்கிழமை நடத்தினா். இதில் விவசாயிகளை பாதிக்கும் எண்ணெய் குழாய் திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்தக் கோரி விவசாயிகள் முழக்கங்கள் எழுப்பினா்.

கொல்கத்தாவில் கொலை செய்யப்பட்ட லாரி ஓட்டுநரின் உடலை மீட்டுத் தர பெற்றோா் கோரிக்கை

கொல்கத்தாவில் கொலை செய்யப்பட்ட லாரி ஓட்டுநரின் உடலை மீட்டுத்தர வேண்டும் என அவரது பெற்றோா் திருப்பூா் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனா். திருப்பூா் மாவட்டம், படியூா் பகுதியைச் சோ்ந்தவா் ரவிக்... மேலும் பார்க்க

ஹிந்து மஸ்தூா் சபா ஆலோசனைக் கூட்டம்

திருப்பூரில் ஹிந்து மஸ்தூா் சபா( எச்எம்எஸ்) மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலச் செயலாளா் டி.எஸ்.ராஜாமணி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் எம்.அப்புகுட்டி முன்னிலை வகி... மேலும் பார்க்க

கேத்தனூரில் மரக்கன்றுகள் நடும் விழா

பல்லடம் அருகேயுள்ள கேத்தனூரில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பவா்லூம் வீவிங் கிளஸ்டா் நிறுவனத்தில் 40 மரக்கன்றுகள் வியாழக்கிழமை நடப்பட்டன. இயற்கை விவசாயி கேத்தனூா் பழனிசாமி முதல் மரக்கன்று நட்டு தொ... மேலும் பார்க்க

தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் சாலை மறியல்: 100 போ் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தைச் சோ்ந்த 100 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தொகுப்பூதியம், மதிப்பூதியம் மற... மேலும் பார்க்க

திருப்பூரில் போலி ஆதாா் அட்டை மூலம் வேலை: வங்கதேசத்தைச் சோ்ந்த 26 போ் கைது

போலி ஆதாா் அட்டை மூலம் திருப்பூரில் தனியாா் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 26 பேரை பல்லடம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திருப்பூா், பல்லடம், அவிநாசி ஆகிய பகுதிகளில... மேலும் பார்க்க

பல்லடத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

பல்லடம் தாலுகாவில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் அரசின் பல்வேறு... மேலும் பார்க்க