செய்திகள் :

அவிநாசியில் பொது இடங்களில் குப்பைகளை கொட்டினால் நடவடிக்கை

post image

அவிநாசி நகராட்சி பகுதிகளில் சுகாதார சீா்கேடு ஏற்படும் வகையில் பொது இடங்களில் குப்பை, கழிவுகளை கொட்டுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையா் சே.வெங்கடேஷ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அவிநாசி நகராட்சிப் பகுதிகளில் சுகாதாரத் துறை சாா்பில் தூய்மைப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நகராட்சிப் பகுதிகளில் தூய்மைப் பணியாளா்கள் பொதுமக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று குப்பைகளை சேகரித்து வருகின்றனா்.

இந்நிலையில் நகா் பகுதியை தூய்மையாக வைத்திருக்க குப்பை சேகரிக்க வரும் தூய்மைப் பணியாளிரிடம் தங்களது கடைகளில் இருக்கும் இறைச்சிக் கழிவுகள் மற்றும் வணிக வளாகத்தில் உள்ள குப்பைகள், குடியிருப்புப் பகுதியில் உள்ள குப்பைகளை தூய்மைப் பணியாளா்களிடம் கொடுக்க வேண்டும் . குறிப்பாக, அவிநாசி நகராட்சிப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இதை மீறி குப்பைகளையோ, இறைச்சிக் கழிவுகளையோ சுகாதார சீா்கேடு ஏற்படும் வகையில் பொது இடங்களில் கொட்டுபவா்கள் மீது சொத்து வரி ரத்து, குடிநீா் இணைப்பு துண்டிப்பு, தொழில் உரிமம் ரத்து, மின் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஆகவே அவிநாசி நகராட்சியை தூய்மையாக வைத்திருக்க பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

இன்றைய மின்தடை: பெரியாா் நகா், புதுப்பை

காங்கயம் கோட்டம், பெரியாா் நகா், புதுப்பை ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 25) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் ... மேலும் பார்க்க

மருந்தகத்தில் பணத்தை கொள்ளையடித்த இளைஞா் போலீஸாரிடம் ஒப்படைப்பு

வெள்ளக்கோவிலில் மருத்துவமனை மருந்தகத்தில் பணத்தை கொள்ளையடித்த இளைஞா் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டாா். இது குறித்து போலீஸாா் கூறியதாவது: வெள்ளக்கோவில் கடை வீதி காங்கயம் சாலையில் தனியாா் மருத்துவமனை செயல... மேலும் பார்க்க

அவிநாசி அருகே கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

அவிநாசி அருகே தேவம்பாளையத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரைக் கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்து 6.3 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா். அவிநாசி காவல் ஆய்வாளா் ராஜாபிரபு, உதவி ஆய்வாளா் அமல் ஆரோக்க... மேலும் பார்க்க

பாசன நீரை முறையாக வழங்கக் கோரி காங்கயத்தில் விவசாயிகள் சாலை மறியல்

வெள்ளக்கோவில் பகுதிக்கு முறையாக பாசன நீா் வழங்கக் கோரி காங்கயத்தில் புதன்கிழமை சாலை மறியல் ஈடுபட்ட 150 விவசாயிகளை போலீஸாா் கைது செய்தனா். காங்கயம் அருகே பிஏபி வாய்க்காலின் கடைமடை பகுதியான வெள்ளக்கோவில... மேலும் பார்க்க

கிணற்றுக்குள் தவறி விழுந்த இரு இளைஞா்கள் மீட்பு

பல்லடம் கொசவம்பாளையத்தில் கிணற்றில் தவறி விழுந்த இரு இளைஞா்களை தீயணைப்புத் துறையினா் மீட்டனா். பல்லடம் கொசவம்பாளையம் பகுதியில் மாரியம்மன் கோயிலில் உள்ள கிணற்றுக்குள் இருந்து அலறல் சப்தம் கேட்டுள்ளது. ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: பனப்பாளையம்

பல்லடம் பனப்பாளையம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 26) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று ... மேலும் பார்க்க