செய்திகள் :

நெல்லை: பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகிறது மாஞ்சோலை; ஆய்வு செய்த மத்தியக் குழுவினர்!

post image

நெல்லை மாவட்டம், களக்காடு- முண்டந்துறை புலிகள் காப்பகம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும். இங்கு 969 ச.கி.மீ பரப்பளவுள்ள வனப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டு வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்த வனப்பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது மாஞ்சோலை. இங்கு ஊத்து, காக்காச்சி, நாலுமுக்கு, குதிரைவெட்டி ஆகிய பகுதிகளில் பாம்பே பர்மா டிரேடிங் கம்பெனி சார்பில் தேயிலை தோட்டங்கள் 99 வருட குத்தகைக்கு எடுக்கப்பட்டு தேயிலை, காபி போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன.

மத்தியக் குழுவினர்

இந்த தேயிலை தோட்டங்களில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தலைமுறை, தலைமுறையாக பணிபுரிந்து வந்தனர். இந்த நிலையில், மாஞ்சோலை வனப்பகுதியின் குத்தகை வரும் 2028-ம் ஆண்டுடன் நிறைவடைகிறது. இதனையொட்டி அந்நிறுவனம் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு அளித்தது.  இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, மனித உரிமை ஆணையம் ஆகியவற்றிலும் தொழிலாளர்களின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

தமிழ்நாடு அரசின் சார்பில் தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்காக அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு ஒதுக்கப்பட்டு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து களக்காடு- முண்டந்துறை வனப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக உச்சநீதிமன்றம் அமைத்துள்ள மத்தியக்குழுவினர், நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டனர். மத்திய உயர்மட்டக் குழுவின் தலைவர் சித்தாந்த தாஸ் தலைமையில் 4 பேர் அடங்கிய குழுவினர் ஆய்வு நடத்தினர்.

மாஞ்சோலை

மாஞ்சோலை தேயிலைத் தோட்ட வனப்பகுதிகளின் தற்போதைய நிலை என்ன? இந்த பகுதியின் மொத்தப்பரப்பளவு, இதற்குரிய சாலை வசதிகள், பாதுகாப்பு நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இதனை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக மாற்றப்பட்டவுடன் யார், யாரை வனப்பகுதிக்குள் அனுப்புவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இக்குழுவினர் மத்திய அரசுக்கு அறிக்கையாக சமர்ப்பிக்க உள்ளனர். அதன்பின்னர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி செயல்பாட்டிற்கு வரும் என்றனர் ஆய்வுக்குழுவினர்.

Dravido gecko:‌ குன்னூரில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய பல்லி இனம்! - வன உயிரின ஆய்வாளர்கள் சொல்வதென்ன?

இயற்கை அளித்திருக்கும் பெருங்கொடைகளில் ஒன்றாக கருதப்படும் மேற்கு தொடர்ச்சி மலை அரியவகை பறவைகள், விலங்குகள், பூச்சியினங்கள், நீர் வாழ்வுகள், இரு வாழ்வுகள் , ஓரிட வாழ்வுகள், ஊர்வன போன்றவற்றின் தாய் மடிய... மேலும் பார்க்க

வனத்தில் தென்பட்ட அரிய பொக்கிஷம், உற்சாகத்தில் ஆய்வாளர்கள்! பின்னணி இதுதான்

அரியவகை உயிரினங்களின் கடைசிப் புகலிடமாக விளங்கி வரும் முதுமலை, பந்திப்பூர், மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தை உள்ளடக்கிய வனத்தில் `Striped hyena' எனப்படும் வரிக்கழுதைப்புலிகளின் எண்ணிக்கை இரட்ட... மேலும் பார்க்க

நீலகிரி: பறிபோன மனித உயிர்கள்; கும்கிகளைக் களமிறக்கிய வனத்துறை; என்ன நடக்கிறது கூடலூரில்?

ஆசிய யானைகளின் மிக முக்கிய வாழிடங்களில் ஒன்றாக விளங்கி வரும் நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் வனக்கோட்டத்தில் கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முறையற்ற வளர்ச்சிப் பணிகளால் யானைகள... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம்: சட்டவிரோத கனிம வள திருட்டு? சாட்டிலைட் சர்வே துவக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்தை ஒட்டிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில் சட்ட விரோதமாக கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டதால் வனவிலங்குகள் பாதிக்கப்படுவதாக வனத்துறை அளித்த புகாரின் எதிர... மேலும் பார்க்க

அடர்ந்த காட்டு பகுதியில் முதலை முட்டை கூடுகள்; 24 மணிநேரமும் கண்காணிக்கும் வனத்துறையினர் - ஏன்?

ராஜஸ்தானின் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் பாலிகாட் என்ற பகுதி உள்ளது. இந்தப் பகுதி அடர்ந்த, முட்கள் நிறைந்த காடுகள் மற்றும் கரடு முரடான பள்ளத்தாக்குகளுக்கு மத்தியில் உள்ளது. இந்த பாலிகாட் பகுதி தேசிய சம... மேலும் பார்க்க