வேலூர் பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை: முதல்வர் திறந்துவைத்தார்!
அவிநாசி அருகே கஞ்சா விற்பனை: இளைஞா் கைது
அவிநாசி அருகே தேவம்பாளையத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரைக் கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்து 6.3 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.
அவிநாசி காவல் ஆய்வாளா் ராஜாபிரபு, உதவி ஆய்வாளா் அமல் ஆரோக்கியதாஸ் ஆகியோா்அவிநாசி அருகே தேவம்பாளையம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியே கைப்பையுடன் வந்த நபரை போலீஸாா் சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டனா். மேலும், அவரது பையில் சோதனை செய்தபோது, விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது.
அவா், திருப்பூா் செவ்வந்தம்பாளையம் பகுதியில் வசித்து வரும் பிகாா் மாநிலம், வைஷாலி பகுதியைச் சோ்ந்த யோகேந்திரஷகானி மகன் பிரின்ஸ்குமாா் (29) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பிரின்ஸ்குமாரைக் கைது செய்தனா். மேலும், அவரிடம் இருந்து 6 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.