செய்திகள் :

அவிநாசி: பத்திரப்பதிவுக்கான தடைச் சான்றை நீக்காததைக் கண்டித்து ஏப். 1-ல் போராட்டம்!

post image

அவிநாசியில் திருமுருகன்பூண்டி கோயிலுக்குச் சொந்தமான இடத்தைத் தவிர மற்ற நிலங்களுக்கு பெற்றுள்ள பத்திரப் பதிவுக்கான தடை சான்றை நீக்காததைக் கண்டித்து, திருமுருகன்பூண்டி கோயில் செயல் அலுவலகம் முன் ஏப்ரல் 1 ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.

அவிநாசி பேரூராட்சிக்கு உள்பட்ட கோவை பிரதான சாலை, மேற்கு, வடக்கு, கிழக்கு ரத வீதிகளில் 200-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் உள்ளன.

இப்பகுதியில் உள்ள வணிக நிறுவனத்தினர் தற்போது தங்களது நிலங்களை விற்கவோ, வாங்கவோ, வங்கியில் கடன் பெறவோ இயலாமல் தடை விதிக்கப்பட்டு அவதிக்குள்ளாகின்றனர்.

இந்நிலையில், அவிநாசி ரத வீதிகள் வியாபாரிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை அவிநாசியில் நடைபெற்றது.

இதையடுத்து வியாபாரிகள் கூறியதாவது,

''அவிநாசி மேற்கு ரத வீதியில் 85- டி மற்றும் 85 -இ திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் சுவாமி கோயிலுக்கு சொந்தமானவை என இந்து அறநிலையத் துறையினர் தடைச் சான்று பெற்றுள்ளனர்.

ஆனால், இதில் 85-டி யில் உள்பிரிவு 427-9 மற்றும் 85-இல் உள் பிரிவு 433-21 மட்டுமே கோயிலுக்கு சொந்தமானது எனத் தெரியவருகிறது.

இருப்பினும் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் விதமாக மற்ற நிலங்களுக்கும் சார்பதிவாளர் அலுவலகத்தில் தடை விதிக்கின்றனர். இதனால் வங்கிக் கடன் கூட பெற முடியாமலும், தொழிலை மேம்படுத்த முடியாமல் உள்ளோம்.

ஆகவே, கோயில் நிலத்தை தவிர மீதமுள்ள நிலங்களுக்கு தடையின்மை சான்று வழங்கி, பத்திரப்பதிவுக்கு அனுமதிக்க வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம்.

இருப்பினும் திருமுருகன்பூண்டி இந்து சமய அறநிலையத் துறையினர் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, திருமுருகன்பூண்டி கோயிலுக்குச் சொந்தமான இடத்தை தவிர மற்ற நிலங்களுக்கு பெற்றுள்ள பத்திரப் பதிவுக்கான தடைச் சான்றை உடனடியாக நீக்கி தடையின்மை சான்று வழங்கக் கோரி, திருமுருகன்பூண்டி கோயில் செயல் அலுவலர் அலுவலகம் முன் ஏப்ரல் 1-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்'' என்றனர்.

காகத்தைக் கண்டு பயந்த யானைகள்: வைரல் விடியோ!

தொட்டியில் தண்ணீர் குடிக்கும் போது காகத்தையைக் கண்டு அச்சப்பட்டு யானைகள் பின் வாங்கும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.கோவை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மீண்டும் தொடங்கிய கோடை வெயிலின் தாக்கத்... மேலும் பார்க்க

12 ஆண்டுகளுக்கு ரூ. 5,870 கோடி... சென்னை மெட்ரோ முக்கிய ஒப்பந்தம்!

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2-ல் 118.9 கி.மீ. நீளத்திற்கு இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான ஏற்பு கடிதம் தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெர... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டணங்கள்: யுபிஐ மூலம் செலுத்தும் வசதி அறிமுகம்!

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான கட்டணங்களை யுபிஐ(UPI) மூலம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை பதிவுக்கான கட்டணம், தேர்வுக் கட்டணங்களை யுபிஐ மூலம் இனி செலுத்தலாம்.2025-ம் ஆண்டு ஜனவரி முதல் ம... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு 15 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. ... மேலும் பார்க்க

வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த தங்க மணி!

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் ’தங்கத்தால் செய்யப்பட்ட மணி’ கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு தன்னுடைய எக்... மேலும் பார்க்க

பிரதமர் இலங்கைக்கு செல்வதாலேயே கச்சத்தீவு தீர்மானம் நிறைவேற்றம்: ரகுபதி

பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செல்ல விருப்பதாலேயே கச்சத்தீவு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி ... மேலும் பார்க்க