செய்திகள் :

ஆசியக் கோப்பை: சூர்யகுமார் யாதவ் முறியடிக்க காத்திருக்கும் 3 சாதனைகள்!

post image

ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 3 சாதனைகள் படைக்கவிருக்கிறார்.

இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பைத் தொடர் வருகிற செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்குகிறது. இந்திய அணி குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது.

இந்திய அணி செப்டம்பர் 10 ஆம் தேதி போட்டியை நடத்தும் ஐக்கிய அரபு அமீரகத்துடன் முதல் போட்டியில் விளையாடுகிறது.

இந்தத் தொடரில் சக்திவாய்ந்த அணியாகக் கருதப்படும் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், வயிற்றில் அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் முதல் முறையாக அணிக்குத் திரும்பவுள்ளார்.

ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் 16 இன்னிங்ஸ்களில் 717 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.

இந்த நிலையில், இந்த ஆசியக் கோப்பைத் தொடரில் சூர்யகுமார் யாதவ் 3 சாதனைகளை முறியடிக்கவிருக்கிறார்.

சர்வதேச டி20 போட்டிகளில் 3000 ரன்கள்

சூர்யகுமார் இதுவரை 79 இன்னிங்ஸ்களில் 167.07 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 2598 ரன்களை குவித்துள்ளார். இவர் 3000 ரன்களை எட்டுவதற்கு இன்னும் 402 ரன்கள் தேவையாக உள்ளன.

இந்த ரன்களை எட்டும் பட்சத்தில் 150 ஸ்ட்ரைக் ரேட்டில் 3000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர் ஆவார் சூர்யகுமார் யாதவ்.

டி20 போட்டிகளில் அதிக சதங்கள்

சர்வதேச டி20 போட்டிகளில் ரோஹித் சர்மா மற்றும் கிளென் மேக்ஸ்வெல்லை (இருவரும் 5 சதங்கள்) தொடர்ந்து, 4 சதங்களுடன் இரண்டாவது இடத்தில் சூர்யகுமார் உள்ளார்.

ஆசியக் கோப்பையில் அவர் ஒரு சதம் அடிக்கும் பட்சத்தில், இருவருடன் முதலிடத்தை சமன் செய்வார்.

டி20 போட்டிகளில் 150 சிக்ஸர்கள்

இதுவரை 146 சிக்ஸர்கள் விளாசியுள்ள சூர்யகுமார் யாதவ், இன்னும் 4 சிக்ஸர்கள் விளாசும் பட்சத்தில் 150 சிக்ஸர்கள் விளாசியவர் பட்டியலில் 5-வது இடத்தைப் பிடிப்பார்.

இந்தப் பட்டியலில் ரோஹித் சர்மா(205), மார்ட்டின் கப்தில் (173), முகமது வாசீம் (168) மற்றும் ஜோஸ் பட்லர் (160) ஆகியோர் முதல் நான்கு இடங்களில் உள்ளனர்.

3 Records Suryakumar Yadav Can Break In Asia Cup 2025

இதையும் படிக்க : தொடர்ந்து மறுக்கப்படும் வாய்ப்புகள்..! கம்பீரின் வாக்குறுதி பற்றி அபிமன்யு தந்தை பேட்டி!

2-வது டெஸ்ட்: மூவர் சதம் விளாசல்; நியூசிலாந்து 476 ரன்கள் முன்னிலை!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் நியூசிலாந்து அணி 476 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.நியூசிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்ட... மேலும் பார்க்க

யாருக்கும் இந்தியா அடிபணியாது! டிரம்ப்புக்கு பியூஷ் கோயல் மறைமுகத் தாக்கு!

யாருக்கும் இந்தியா ஒருபோதும் அடிபணியாது என அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பொருளாதார மிரட்டலுக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார். மேலும் பார்க்க

ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடருக்கு தயாராகிறாரா விராட் கோலி?

இந்திய அணி வீரர் விராட் கோலி பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டது போன்ற இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றை பகிர்ந்ததால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு அவர் தயாராகிறாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தி... மேலும் பார்க்க

தொடர்ச்சியாக ரன்கள் குவித்த ரவீந்திர ஜடேஜாவுக்கு பார்த்திவ் படேல் பாராட்டு!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரவீந்திர ஜடேஜாவை முன்னாள் வீரர் பார்த்திவ் படேல் பாராட்டியுள்ளார்.உலகின் நம்பர்.1 ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா அண்மைய... மேலும் பார்க்க

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சதம் விளாசிய டெவான் கான்வே; வலுவான நிலையில் நியூசி.!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வே சதம் விளாசி அசத்தியுள்ளார்.நியூசிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்று... மேலும் பார்க்க

தொடர்ந்து மறுக்கப்படும் வாய்ப்புகள்..! கம்பீரின் வாக்குறுதி பற்றி அபிமன்யு தந்தை பேட்டி!

இந்திய அணியில் அபிமன்யு ஈஸ்வரனுக்கு விரைவில் இடம் கிடைக்கும் என தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் உறுதியளித்ததாக அவரது தந்தை ரங்கநாதன் ஈஸ்வரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் ... மேலும் பார்க்க