ஆட்சியா் அலுவலகத்தில் தேவையற்ற பொருள்களை மறுசுழற்சிக்கு ஏற்பாடு
அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள தேவையற்ற பொருள்களை மறுசுழற்சி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் உள்ள தேவையற்ற பொருள்களை சேகரித்து அதனை சரியான முறையில் மறுசுழற்சி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள அலுவலகங்களில் தேவையற்ற மற்றும் பயன்படுத்த முடியாத பழைய நாற்காலிகள், மேஜைகள், கணினி மற்றும் கணினி பொருள்களை மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, பயன்பாடற்று கிடக்கும் பொருள்களை மறு சுழற்சிக்கு அனுப்ப உத்தரவிட்டாா். ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ரா.சிவராமன், உதவி திட்ட அலுவலா் ஸ்டான்லி உள்ளிட்டோா் உடனிருந்தனா்