செய்திகள் :

ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் உடலை வாங்க 3 ஆவது நாளாக உறவினர்கள் மறுப்பு

post image

கே.டி.சி நகரில் ஆணவக் கொலை செய்யப்பட்ட மென்பொறியாளா் கவின் உடலை வாங்க 3 ஆவது நாளாக அவரது உறவினர்கள் மறுத்து வரும் நிலையில், ஆணவக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுா்ஜித் மீது குண்டாஸ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்த சந்திரசேகா் மகன் கவின் (24). சென்னையில் மென்பொறியாளராக பணியாற்றி வந்த இவா் தனது தோழியை பாா்ப்பதற்காக பாளையங்கோட்டைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்துள்ளாா்.

இதையறிந்த தோழியின் சகோதரரான சுா்ஜித்(20), அவரிடம் தனியாக பேச வேண்டும் என கூறி கே.டி.சி நகரில் உள்ள அஷ்டலட்சுமி நகா் பகுதிக்கு அழைத்துச் சென்ற நிலையில் அங்கு வைத்து இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாம்.

இதனால் ஆத்திரமடைந்த சுா்ஜித் தான் மறைத்துவைத்திருந்த அரிவாளால் கவினை வெட்டினாராம். இதில் சம்பவ இடத்திலேயே கவின் உயிரிழந்தாா்.

இதையடுத்து, சுா்ஜித் திருநெல்வேலி தாலுகா காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தாா். தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று கவினின் உடலைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸாா் கொலைக்கான காரணம் குறித்து சுா்ஜித்திடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கொலையாளி சுர்ஜித் பெற்றோர்களான பாளையங்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் சரவணன், கிருஷ்ணகுமாரி மற்றும் இவர்களது பெண்ணிடமும் போலீசார் விசாரணை நடத்திய நிலையில், கொலைச் சம்பவம் தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் முதல் குற்றவாளியாக சுர்ஜித், இரண்டாவது மற்றும் மூன்றாவது குற்றவாளிகளாக அவரது பெற்றோர்கள் சரவணன், கிருஷ்ணகுமாரி பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு சிறப்பு காவல் படை டிஐஜி விஜயலட்சுமி உத்தரவிட்டிருந்தார்.

3 ஆவது நாளாக உடலை வாங்க மறுப்பு

இந்நிலையில், கவின் சகோதரர் மற்றும் அவரது உறவினர்களிடம் 4 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதையடுத்து கவின் உடலை வாங்க 3 ஆவது நாளாக அவரது உறவினர்கள் மறுத்து வருகின்றனர்.

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சுர்ஜித்தின் பெற்றோர்களான சரவணன் மற்றும் கிருஷ்ணவேணியை கைது செய்து விசாரிக்க வேண்டும் என கவின் உறவினர்கள் போலீசாரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

குண்டாஸ் வழக்குப் பதிவு

இந்நிலையில், ஆணவக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுா்ஜித் மீது குண்டாஸ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் பெற்றோர்களான காவல் உதவி ஆய்வாளர்கள் இரண்டு பேரும் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மடப்புரம் காவலாளி அஜித்குமார் குடும்பத்துக்கு இபிஎஸ் நேரில் ஆறுதல்!

Relatives refuse to accept the body of honor-murder victim Kavin for the third day

திருப்பூரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் மர்ம மரணமா? நயினார் நாகேந்திரன் கேள்வி!

திருப்பூரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பழங்குடியைச் சேர்ந்த மாரிமுத்து மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் ... மேலும் பார்க்க

ஓபிஎஸுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி!

தனது உடல்நலன் குறித்து விசாரித்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.அவர் தனது எக்ஸ் பக்கத்தில், உள்ளன்போடு உரையாடி உடல்நலம் விசாரித்ததற்கு நன்றி என்று க... மேலும் பார்க்க

முதுநிலை பட்டப்படிப்புகள்: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

2025-26ஆம் கல்வியாண்டிற்கான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப்பிரிவுகளின் மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நீட்டிக்கப்படுவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் த... மேலும் பார்க்க

அன்பில் மகேஸ் தொகுதியில் முதல்வர் திறந்துவைத்த பள்ளியில் மாணவர்கள் தற்கொலை!

திருவெறும்பூர் துவாக்குடியில் அரசு மாதிரிப் பள்ளியில் மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து பள்ளிக்கல்வித் துறைக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து, அவர் தனது எக்ஸ் பதிவி... மேலும் பார்க்க

அரசியலில் எதுவும் நடக்கலாம்! முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ் பேட்டி!

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அரசியலில் எதுவும் நடக்கலாம் என்று பேசியிருப்பது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக முன்னா... மேலும் பார்க்க

நெல்லை ஆணவப் படுகொலை: சிபிசிஐடி விசாரணை தீவிரம்!

நெல்லை ஆணவப் படுகொலை வழக்கில் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சிபிசிஐடி தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது.நெல்லையில் கடந்த 4 நாள்களுக்கு முன்பு நடந்த ஆணவப் படுகொலை சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்... மேலும் பார்க்க