செய்திகள் :

ஆண்டுக்கு 7.5 லட்சம் வாகனங்களைத் தயாரிக்க இலக்கு: சுசூகி மோட்டார்சைக்கிள்

post image

இந்தியாவில் ஆண்டுக்கு 7.5 லட்சம் இருசக்கர வாகனங்களைத் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹரியாணா மநிலம் கார்கோடா பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் புதிய ஆலையைக் கட்டும் பணியை சுசூகி மோட்டார்சைக்கிள் தொடங்கியுள்ளது. இந்தப் பணிகள் முடிவடைந்து 2027ஆம் ஆண்டில் ஆலையில் தயாரிப்புப் பணிகள் தொடங்கப்படும் என்றும், இதற்காக ரூ. 1200 கோடி முதலீடு செய்யப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜப்பானைச் சேர்ந்த சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனம், இந்தியாவில் இரண்டாவது ஆலையைத் தொடங்குவதற்கானப் பணிகளை மேற்கொண்டுள்ளது. ஹரியாணாவின் கார்கோடா பகுதியில் ரூ. 1200 கோடி முதலீட்டில் 100 ஏக்கர் பரப்பளவில் இந்த ஆலை அமையவுள்ளது.

இதில் முதல் 25 ஏக்கர் பரப்பளவில் ஆரம்பகட்ட உற்பத்திக்கும், மற்றோரு 25 ஏக்கர், பசுமையான இடமாக வைத்துக்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. 2027ஆம் ஆண்டில் ஆலை முழுமையாகச் செயல்பாட்டிற்கு வரும் என்றும் ஆண்டுக்கு 7.5 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்ய முதற்கட்டமாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

ஹரியாணாவின் குருகிராம் பகுதியில் 2006ஆம் ஆண்டு முதல் சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண்டுக்கு 5.4 லட்சம் வாகனங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

கனிமொழி தலைமையிலான எம்.பி.க்கள் குழு இன்று ரஷியா பயணம்!

திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி தலைமையிலான எம்.பி.க்கள் குழு இன்று ரஷியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது.பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்ற பெயரில் பாகிஸ்தானில் ச... மேலும் பார்க்க

ரூ.2,152 கோடி கல்வி நிதி நிறுத்திவைப்பு: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு

நமது நிருபர்தேசிய கல்விக் கொள்கை (என்இபி- 2020) மற்றும் பிஎம் ஸ்ரீ திட்டம் ஆகியவற்றை தமிழகத்தில் அமல்படுத்தாததால், சமக்ர சிக்ஷா திட்டத்தின் (எஸ்எஸ்எஸ்) கீழ் வழங்க வேண்டிய ரூ.2,152 கோடி கல்வி நிதி நிறு... மேலும் பார்க்க

ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கு: கா்நாடக உள்துறை அமைச்சருக்கு தொடா்புள்ள இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்குடன் தொடா்புள்ள பண முறைகேடு வழக்கு தொடா்பாக, கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வராவுக்கு தொடா்புள்ள கல்வி நிறுவனங்களில் அமலாக்கத் துறை புதன்கிழமை சோதனை மேற்கொண்டது. துபை... மேலும் பார்க்க

ஆந்திரம்: ரேஷன் பொருள் நேரடி விநியோகம் ஜூன் 1 முதல் ரத்து

ஆந்திரத்தில் வீடுதோறும் ரேஷன் பொருள்கள் நேரடியாக விநியோகம் செய்யப்படும் நடைமுறை ஜூன் 1-ஆம் தேதிமுதல் நிறுத்தப்பட உள்ளது. இதுதொடா்பாக மாநில உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் என்.மனோகா் புதன்கிழமை வெளி... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாடு- முதல் எம்.பி.க்கள் குழு ஜப்பான் பயணம்

ஆபரேஷன் சிந்தூா் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை வெளிநாடுகளுக்கு எடுத்துரைக்க மத்திய அரசால் அமைக்கப்பட்ட ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. சஞ்சய் ஜா தலைமையிலான பல்வேறு கட்சிகளைச் சோ்... மேலும் பார்க்க

பிகாரில் மகளிருக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை: காங்கிரஸ் வாக்குறுதி

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ள ‘மகா கட்பந்தன்’ கூட்டணி வெற்றி பெற்றால் பின்தங்கிய நிலையில் உள்ள மகளிருக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை வழங்கப்படும் என்று அகில இந்திய மகளிா் காங... மேலும் பார்க்க