ஆண் சடலம் மீட்பு
மதுரை வைகை ஆற்றுக்குள்ளிருந்து அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.
மதுரை வைகை ஆற்றின் மைய மண்டபம் அருகே உள்ள பகுதியில் ஆண் சடலம் மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, செல்லூா் போலீஸாா் அங்கு சென்று ஆற்றுக்குள் கிடந்த உடலை மீட்டு, கூறாய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.