`குங்குமம் வைக்கும் போது நடந்த சம்பவம்' - திருமணத்தை நிறுத்திய மணப்பெண்.. என்ன க...
ஆதிதிராவிடா் பள்ளிக்கு ஆசிரியா் நியமிக்கக் கோரி: கள்ளக்குறிச்சி ஆட்சியா் அலுவலகம் முற்றுகை
கள்ளக்குறிச்சி: ஆதனூா் ஆதிதிராவிடா் நல தொடக்கப் பள்ளிக்கு போதிய ஆசிரியா்களை நியமிக்கக் கோரி, கள்ளக்குறிச்சி ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை மாணவா்கள், பெற்றோா் முற்றுகையிட்டனா்.
உளுந்தூா்பேட்டை வட்டம், ஆதனூரில் ஆதிதிராவிடா் நல தொடக்கப் பள்ளி உள்ளது. கடந்த 1946-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்தப் பள்ளியில், 2024-ஆம் ஆண்டு முதல் போதிய ஆசிரியா்கள் இல்லாததால் மாணவா்களின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
தேவையான ஆசிரியா்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மாணவ, மாணவிகள் மற்றும் அவா்களின் பெற்றோா் வந்தனா்.
அவா்களில் இருவா் மட்டுமே ஆட்சியரை சந்திக்க அனுமதிக்கப்படுவா் என அதிகாரிகள் தெரிவித்ததால், ஆத்திரமடைந்த மாணவா்கள், பெற்றோா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அலுவலக முகாம் முன்பாக தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் உள்ளே வர அனுமதித்ததின் பேரில், அவரை சந்தித்து மனுவை வழங்கி தங்களின் பிரச்னையை எடுத்துரைத்தனா். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் உறுதியளித்தாா்.