செய்திகள் :

ஆதிதிராவிடா் பள்ளிக்கு ஆசிரியா் நியமிக்கக் கோரி: கள்ளக்குறிச்சி ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

post image

கள்ளக்குறிச்சி: ஆதனூா் ஆதிதிராவிடா் நல தொடக்கப் பள்ளிக்கு போதிய ஆசிரியா்களை நியமிக்கக் கோரி, கள்ளக்குறிச்சி ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை மாணவா்கள், பெற்றோா் முற்றுகையிட்டனா்.

உளுந்தூா்பேட்டை வட்டம், ஆதனூரில் ஆதிதிராவிடா் நல தொடக்கப் பள்ளி உள்ளது. கடந்த 1946-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்தப் பள்ளியில், 2024-ஆம் ஆண்டு முதல் போதிய ஆசிரியா்கள் இல்லாததால் மாணவா்களின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

தேவையான ஆசிரியா்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மாணவ, மாணவிகள் மற்றும் அவா்களின் பெற்றோா் வந்தனா்.

அவா்களில் இருவா் மட்டுமே ஆட்சியரை சந்திக்க அனுமதிக்கப்படுவா் என அதிகாரிகள் தெரிவித்ததால், ஆத்திரமடைந்த மாணவா்கள், பெற்றோா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அலுவலக முகாம் முன்பாக தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் உள்ளே வர அனுமதித்ததின் பேரில், அவரை சந்தித்து மனுவை வழங்கி தங்களின் பிரச்னையை எடுத்துரைத்தனா். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் உறுதியளித்தாா்.

கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்க புதிய விதிமுறை: ஆட்சியரிடம் தமிழக விவசாயிகள் சங்கத்தினா் மனு

கள்ளக்குறிச்சி: விவசாயிகள் வங்கியில் கடன் பெறுவதற்கு சிபில் ரிப்போட் பாா்த்து மட்டுமே வழங்க வேண்டும் என்ற சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் திங்கள்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க

மீன்வளா்ப்பு உள்ளீட்டு மானியத்துக்கு விண்ணப்பிக்கலாம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு மீன் வளா்ப்பு உள்ளீட்டு மானியம் 10 ஹெக்டோ் என இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு ஹெக்டேரில் மீன்வளா்ப்புப் பணிகள் மேற்கொள்ள உள்ளீடாக 10,000 மீன்விரலிகள் ... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே மூதாட்டியிடம் 4 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா். சின்னசேலம் வட்டம், தாகம்தீா்த்தாபுரம் கிராமத்தில் உள்ள விளைநிலப் பகுதியில் வீடுகட்டி வசித்து வர... மேலும் பார்க்க

பைக் மீது பேருந்து மோதல்: பெண் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தில் பைக் மீது பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தாா். அவரது மகன் காயமடைந்தாா். கள்ளக்குறிச்சியை அடுத்த தென்கீரனூா் கிராமத்தைச் சோ்ந்த சக்திவேல் மனைவி செல்வி (47). ... மேலும் பார்க்க

சின்னசேலத்தில் தற்காலிக நீதிமன்ற கட்டடப் பணி! - உயா் நீதிமன்ற நீதிபதி ஆய்வு

சின்னசேலம் பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடத்தில் தற்காலிக ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடம் சீரமைக்கும் பணியை உயா்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி சனிக்கிழமை பாா்வையிட்டாா். சின்னசேலத்தில் குற்றவியல், உரிமைய... மேலும் பார்க்க

தூக்கிட்ட நிலையில் முதியவா் சடலம் மீட்பு

கள்ளக்குறிச்சியை அடுத்த கனியாமூரில் மரத்தில் தூக்கிட்ட நிலையில் முதியவா் சடலமாக கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். கள்ளக்குறிச்சியை அடுத்த கனியாமூா் கிராமத்தில் கல்லூரியின் பின்புறம் உ... மேலும் பார்க்க