செய்திகள் :

ஆந்திரத்தில் தகிக்கும் வெப்பம்: 223 மண்டலங்களுக்கு எச்சரிக்கை!

post image

ஆந்திரப் பிரதேசத்தில் 35 மண்டலங்களில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் ஆறு மண்டலங்களில் கடுமையான வெப்ப அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பேரிடர் மேலாண்மை நிர்வாக இயக்குநர் ஆர். கூர்மநாத் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து விஜயநகரம் (9 மண்டலங்கள்), பார்வதிபுரம் மன்யம் (12), அல்லூரி சீதாராம ராஜு, காக்கிநாடா தலா (மூன்று), கிழக்கு கோதாவரி (2) உள்ளிட்ட 35 மண்டலங்களில் கடும் வெப்ப அலை வீசும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கூடுதலாக, ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் 19 மண்டலங்கள் உள்பட 223 மண்டலங்கள் வெப்ப அலைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இவற்றைத் தொடர்ந்து விஜயநகரம் மற்றும் அனகப்பள்ளி (தலா 16 மண்டலங்கள்) மற்றும் கிழக்கு கோதாவரி, எலுரு, குண்டூர் (தலா 17), பிரகாசம் மாவட்டத்தில் உள்ள டாடிசெர்லா கிராமத்திலும், ஒய்எஸ்ஆர் கடப்பாவில் உள்ள கமலாபுரத்திலும் வெள்ளிக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 42.6 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

மாநிலம் முழுவதும் வெள்ளிக்கிழமை 181 இடங்களில் 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி வெப்பநிலை பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வருவதைத் தவிர்க்குமாறும், குறிப்பாகக் கர்ப்பிணிகள், முதியவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், அதிகப்படியான தண்ணீர் அருந்துமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

ராகுல் தலைமையில் காங்கிரஸ் எம்பிக்கள் ஆலோசனை!

நாடாளுமன்றத்தில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா இன்று தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், காங்கிரஸ் எம்பிக்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆலோசனை செய்து வருகிறார்.நாடு முழுவதும் ‘வக்ஃப்’ வாரிய சொ... மேலும் பார்க்க

இன்று வரலாற்று சிறப்புமிக்க நாள்: வக்ஃப் கூட்டுக் குழுத் தலைவர்

நாடாளுமன்றத்தில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது குறித்து கூட்டுக்குழுத் தலைவர் ஜகதாம்பிகா பால் கருத்து தெரிவித்துள்ளார்.வக்ஃப் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் இன்று(ஏப். 2... மேலும் பார்க்க

உ.பி. அரசுப் பள்ளிகளில் தமிழ்: முதல்வர் ஆதித்யநாத் தகவல்

உத்தர பிரதேச அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம், மராத்தி ஆகிய மொழிகள் பயிற்றுவிக்கப்படுவதாக அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.இது தொடர்பாக அவர்... மேலும் பார்க்க

மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் வலியுறுத்தல்

‘மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாகத் தொடங்க வேண்டும்’ என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் வலியுறுத்தியது. மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது எதிா்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தேசிய தலைவருமான மல்லிகாா்ஜு... மேலும் பார்க்க

ரிசா்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே நீடித்த ஒத்துழைப்பு அவசியம்- குடியரசுத் தலைவா் வலியுறுத்தல்

‘தொழில்நுட்ப வளா்ச்சியால் நிதி மோசடிகளின் அபாயங்கள் அதிகரித்து வரும் நிலையில், ரிசா்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே நீடித்த ஒத்துழைப்பு அவசியம்’ என்று குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு செவ்வாய்க... மேலும் பார்க்க

விமான மசோதா: மாநிலங்களவையில் நிறைவேற்றம்

விமானத் துறை சாா்ந்த இந்தியாவின் சா்வதேச ஒப்பந்தங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் விமான மசோதா, 2025, மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் மாநிலங்களவையில் இந்த மசோத... மேலும் பார்க்க