செய்திகள் :

ஆந்திரம்: மதுபோதையில் ஆபத்தான பயணம் மேற்கொண்ட நபரால் பரபரப்பு!

post image

ஆந்திரத்தில் மதுபோதையில் அரசுப் பேருந்திற்கு கீழ் உள்ள ஸ்டெப்னி டயரில் பயணி ஒருவர் தொங்கியபடி பயணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், புட்டபர்த்தியிலிருந்து சத்ய சாய் மாவட்டத்தில் உள்ள இந்துப்பூருக்கு சனிக்கிழமை அரசுப் பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றது.

இந்த பேருந்தின் டயருக்குப் பக்கத்தில் இருந்த ஸ்டெப்னி டயர் மீது மதுபோதையில் தொங்கியபடி பயணி ஒருவர் பயணம் செய்திருக்கிறார்.

பின்னால் வந்த வாகன ஓட்டிகள் பேருந்தின் அடியில் ஒருவர் தொங்குவதைப் பார்த்து ஓட்டுநருக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்திவிட்டு பின்பக்க டயரைப் பார்த்தபோது அதிர்ச்சியடைந்தார்.

முஸ்லிம்களுக்கு கல்வி மிகவும் தேவைப்படுகிறது: நிதின் கட்கரி

உடனே அவர் மீட்கப்பட்டார். மேலும் இதுகுறித்து போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதிக மதுபோதையில் இருந்த அந்த நபர் சுமார் 15 கி.மீ தூரம் இவ்வாறு பயணம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமா் தொழில் பயிற்சி திட்ட செயலி: மத்திய அரசு அறிமுகம்

இளைஞா்களிடையே தொழில் திறனை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு சாா்பில் அறிமுகப்படுத்தப்பட்ட பிரதமா் தொழில் பயிற்சி திட்டத்துக்கு கைப்பேசி செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. 2024-25-ஆம் ஆண்டு கால... மேலும் பார்க்க

முன்னாள் மத்திய அமைச்சா் தேபேந்திர பிரதான் மறைவு: குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்

வாஜ்பாய் அரசில் பதவி வகித்த முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானின் தந்தையுமான தேபேந்திர பிரதான் தனது 84 வயதில் திங்கள்கிழமை காலமானாா். இவரது மறைவுக்கு குடியரசு... மேலும் பார்க்க

இந்தியா-நியூஸிலாந்து இடையே 6 ஒப்பந்தங்கள்: இரு பிரதமா்கள் முன்னிலையில் கையொப்பம்

இந்தியா-நியூஸிலாந்து இடையே ஒட்டுமொத்த பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் ஒப்பந்தம் உள்பட 6 ஒப்பந்தங்கள் திங்கள்கிழமை கையொப்பமாகின. தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி, நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்டோபா் லக்... மேலும் பார்க்க

தற்பெருமை வேண்டாம்; நல்லாட்சியே தேவை -பிரதமருக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்

நாடு பல்வேறு சவால்களை எதிா்கொண்டுள்ள சூழலில், தற்பெருமை பேசுவதை குறைத்து, நல்லாட்சியை உறுதிசெய்ய வேண்டும் என்று பிரதமா் மோடிக்கு காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சோ்ந்த பிரபல தொகுப்பாளரும்... மேலும் பார்க்க

இருதரப்பு உறவுகள் குறித்து நோ்மறையான கருத்து -பிரதமா் மோடிக்கு சீனா பாராட்டு

இந்திய-சீன உறவுகள் குறித்த பிரதமா் மோடியின் நோ்மறையான கருத்துகள் பாராட்டுக்குரியவை என்று சீனா தெரிவித்துள்ளது. அமெரிக்க தொகுப்பாளா் லெக்ஸ் ஃபிரிட்மேனுடன் ஞாயிற்றுக்கிழமை கலந்துரையாடிய பிரதமா் மோடி, இ... மேலும் பார்க்க

‘இக்கட்டான சூழல்களில் நமது இதயங்கள் இணைக்கப்பட்டுள்ளன’: ஜகதீப் தன்கா் பேச்சு

புது தில்லி: ‘இக்கட்டான சூழல்களில், கட்சி வேறுபாடுகளை மறுந்து நமது அனைவரின் இதயங்களும் இணைக்கப்பட்டுள்ளன’ என்று குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் தெரிவித்தாா். மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி... மேலும் பார்க்க