செய்திகள் :

ஆந்திராவில் போக்குவரத்து விதிகளை மீறினால் கடும் அபராதம், சிறை!

post image

ஹைதராபாத்: இன்று முதல் ஆந்திர அரசு போக்குவரத்து விதிகளை கடுமையாக்கியுள்ளது. விருப்பப்படி விதிகளை மீறியதற்காக வாகன ஓட்டிகளை உயர் நீதிமன்றம் கடுமையாக கண்டித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மார்ச் 1 முதல் நடைமுறைக்கு வரும் இந்த புதிய விதிகளை மீறுபவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும். அதிவேகமாக வாகனம் ஓட்டுவதும் தற்போது கண்டிப்பாகிவிட்டது. பந்தயம் அல்லது ஸ்டண்ட் செய்வது கண்டிப்பாக அனுமதிக்கப்படாது.

இத்துடன் நிற்கவில்லை, முதல் முறை பாக்கெட்டை பதம் பார்க்காது என்றாலும் மீண்டும் மீண்டும் குற்றங்கள் புரியும் போது பெரும் அபராதங்களை ஈர்க்கும். சில சந்தர்ப்பங்களில் வாகனம் ஓட்டும் போது செல்போனில் பேசுவது போன்றவை 6 மடங்கு அபராதம் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்களுக்கான அபராதம் எலவ்வாறு விதிக்கப்படும் குறித்து இங்கே பார்ப்போம்:

  • ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். இது பில்லியன் மற்றும் டிரிபிள் ரைடிங்கிற்கும் பொருந்தும்.

  • சீட் பெல்ட் இல்லை என்றால் ரூ.1,000 அபராதம்.

  • குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10,000 அபராதமும், லைசென்சும் ரத்து செய்யப்படும்.

  • மைனர் வாகனம் ஓட்டி பிடிபட்டால் ரூ.25,000 மற்றும் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும்.

  • மைனர் வாகனம் ஓட்ட அனுமதித்தால் ரூ.1,000 மற்றும் மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும்.

  • ஓட்டுநர் உரிமம் இல்லை என்றால் ரூ.5,000 அபராதம், வாகனம் பறிமுதல் செய்யப்படும்.

  • மாசு சான்றிதழ் இல்லை என்றால் ரூ.1,500 வழங்கப்படும்.

  • காப்பீடு இல்லை என்றால் ரூ.2,000 அபராதம் வழங்கப்படும். மீண்டும் குற்றம் செய்தால் ரூ.4,000 அபராதம் வழங்கப்படும்.

  • பதிவு புதுப்பித்தல் வரிசையில் இல்லை என்றால் முதல் முறையாக ரூ.2,000 அபராதமும், இரண்டாவது முறையாக ரூ.5,000 வழங்கப்படும்.

  • வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசினால், முதல் முறைாக ரூ.1,500 அபராதமும் இரண்டாவது முறையாக ரூ.10,000 வழங்கப்படும்.

  • வேகம், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல் மற்றும் சிக்னல் தாண்டுதல் ஆகியவற்றுக்கு ரூ.1,000 அபராதம் வழங்கப்படும்.

  • பந்தயம் அல்லது ஸ்டண்ட் செய்தல் ரூ.5,000 அபராதமும் மீண்டும் குற்றம் புரிந்தால் ரூ.10,000 அபராதம் வழங்கப்படும்.

  • ஆட்டோ ஓட்டுநர்களுக்கான புதிய விதிகளை அமல்படுத்தி வரும் நிலையில், ஓட்டுநர்கள் சீருடையில் இருக்க வேண்டும், இல்லை என்றால் முதல் முறையாக ரூ.150 அபராதமும் மீண்டும் செய்யும் தவறுக்கு ரூ.300 அபராதம் விதிக்கப்படும்.

நடப்பாண்டில் ஜிஎஸ்டி வருவாய் 11% அதிகரிக்கும்!

நடப்பாண்டில் ஜிஎஸ்டி வரி வருவாய் அதிகரிக்கலாம் என்று மத்திய அரசு கணித்துள்ளது.கடந்த பிப்ரவரி மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் 9.1 சதவிகிதம் அதிகரித்ததாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்தாண்டு இதே... மேலும் பார்க்க

உத்தரகண்ட் பனிச்சரிவில் சிக்கிய 50 பேர் மீட்பு: 4 பேர் பலி!

உத்தரகண்ட் பனிச் சரிவில் சிக்கிய 55 பேரில் 50 தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 4 பேர் பலியானதாக இந்திய - திபெத் எல்லை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.பனிச் சரிவில் சிக்கிய 55 பேரில் 50 பேர் காய... மேலும் பார்க்க

வாட்ஸ்ஆப்பில் கைத்தவறி அழைப்பு செல்வதைத் தடுக்கும் வசதி

செல்போனில் அரட்டை அடிக்க, பேச என பல வசதிகள் ஏற்படுத்திக்கொண்டே செல்லும் செயலிகளில் முதலிடம் வாட்ஸ்ஆப்-க்குத்தான்.வாட்ஸ்ஆப்பில் பயனர்கள் சந்திக்கும் சிக்கல்கள், பிரச்னைகள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்... மேலும் பார்க்க

இந்தியா: மொபைல் போன் ஏற்றுமதி 40% அதிகரிக்க வாய்ப்பு

இந்தியாவில் மொபைல் போன்களின் ஏற்றுமதி அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.உலகளவில் அதிக மக்கள்தொகையில் முதலிடம் கொண்டுள்ள இந்தியாவில் மொபைல் போன்களின் தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அத... மேலும் பார்க்க

இலங்கை முன்னாள் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு

இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவை தலைநகர் தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற என்எக்ஸ்டி மாநாட்டில் பிரதமர் மோடி சந்தித்தார்.இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது, "என்எக்ஸ... மேலும் பார்க்க

ஹிமாசலில் கனமழை, பனிப்பொழிவு: 538 சாலைகள் மூடல்!

ஹிமாசல் பிரதேசத்தில் மழை மற்றும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக 538 சாலைகள் மூடப்பட்டதால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.ஹிமாசல் பிரதேசத்தில் மழை, பனிப்பொழிவு காரணமாக பல மாவட்டங்கள் பாதிக்கப்பட... மேலும் பார்க்க