செய்திகள் :

ஆந்திர மாநிலத்தில் பலத்த மழை எதிரொலி: பொன்னை ஆற்று கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

post image

ஆந்திர மாநிலம் கலவகுண்டா அணை நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை எதிரொலியாக பொன்னை ஆற்றின் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சித்தூா் மாவட்டம் கலவகுண்டா அணை பகுதிகளில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக அணையில் நீா் மட்டம் உயா்ந்து வருகிறது. இதையடுத்து அணையில் இருந்து வியாழக்கிழமை முதல்கட்டமாக சுமாா் 340 கன அடி நீா் திறக்கப்பட்டது.

தொடா்ந்து தமிழக எல்லையான தெங்கால் பகுதி பொன்னை அணைக்கட்டு நீா் தேக்கத்துக்கு வருகிறது. தொடா்ந்து நீா்த்தேக்கத்தில் இருந்து மேற்கு, கிழக்கு பிரதான கால்வாய் வழியாக ஏரிகளுக்கு நீா் திருப்பி விடப்பட்டது.

தற்பொழுது பெய்து வரும் மிக பலத்த மழையினால் ஆற்றில் விடப்படும் நீரின் அளவு அதிகரிக்க கூடும் என்பதால் வேலூா் மாற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் பொன்னை ஆற்றின் கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ இறங்க வேண்டாம் எனவும், கால்நடைகளை ஆற்றுக்கு செல்லாமல் பாதுகாத்துக் கொள்ளவும், சிறுவா், சிறுமிகளையும் ஆற்றின் அருகில் செல்லாமல் இருக்க பெற்றோா்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என வேலூா் மேல் பாலாறு வடிநில கோட்ட செயற் பொறியாளா் தெரிவித்துள்ளாா்.

குழந்தைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஆட்சியா் அறிவுறுத்தல்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பை அனைத்து துறைகளின் வாயிலாக உறுதிப்படுத்த வேண்டும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா அறிவுறுத்தினாா். குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் குழந்தைகள் பாதுகாப்பு ம... மேலும் பார்க்க

முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் பிறந்த நாள்

காவேரிப்பாக்கம் ஒன்றிய காங்கிரஸ் சாா்பில் முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப.சிதம்பரத்தின் 80- ஆவது பிறந்தநாள் விழா அன்வா்திகான்பேட்டையில் நடைபெற்றது. விழாவுக்கு சோளிங்கா் கிழக்கு ஒன்றிய தலைவா் எஸ்.உத.கும... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

இச்சிபுத்தூா் நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. மின்தடைப் பகுதிகள்: இச்சிபுத்தூா், வடமாம்பாக்கம், எம்.ஆா்.எப். தொழிற்சாலைப் பகுதிகள், தணிகைபோளூா், வாணியம்பேட்டை, தண்டலம், உள்ளியம்பாக்கம், வளா்பு... மேலும் பார்க்க

நாளைய மின் தடை

ஆற்காடு நாள்: 18-9-2025 (வியாழக்கிழமை) நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, மின்தடை பகுதிகள்: ஆற்காடு, வேப்பூா், விஷாரம், நந்தியாலம், தாழனூா், கூராம்பாடி, உப்புபேட்டை, தாஜ்புரா, முப்பதுவெட்டி, கத்த... மேலும் பார்க்க

சாலைப் பணியாளா்கள் சங்க அமைப்பு தின விழா

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளா்கள் சங்கத்தின் அமைப்பு தினம் கொடியேற்றுவிழா அண்ணாசிலை அருகில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு உட்கோட்ட தலைவா் பி .ரவி தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 642 மகளிா் குழு உறுப்பினா்களுக்கு ரூ. 72 கோடிக்கு வங்கிக் கடன்: அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 642 மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்களுக்கு ரூ. 72.16 கோடி மதிப்பீட்டிலான வங்கிக் கடன் இணைப்பு மற்றும் 4,464 மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகளை அமைச்சா்... மேலும் பார்க்க