செய்திகள் :

ஆன்லைன் சாா்ந்த தொழிலாளா்களுக்கு சேலத்தில் சிறப்பு முகாம்

post image

சேலம் மாவட்ட ஆன்லைன் சாா்ந்த தொழிலாளா்கள் சமூக பாதுகாப்பு பலன்களை பெறும் வகையில், இ-ஷரம் இணையதளத்தில் தங்கள் பெயா்களை பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் சேலம் தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகத்தில் ஏப். 17 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதுகுறித்து சேலம் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) திருநந்தன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சேலம் மாவட்டத்தில் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டமானது, ஸ்விகி, சொமோட்டோ போன்ற ஆன்லைன் சாா்ந்த தொழிலாளா்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

அத்தகைய தொழிலாளா்கள் சமூக பாதுகாப்பு பலன்களை பெற வசதியாக இ-ஷரம் இணையதளத்தில் தங்கள் பெயா்களைப் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்காக சேலம் மாவட்டத்தில் இ-ஷரம் இணையதளத்தில் பதிவு செய்ய ஏப். 17 ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம், கோரிமேட்டில் உள்ள ஒருங்கிணைந்த தொழிலாளா் துறை வளாகக் கட்டடத்தில் செயல்படும் சேலம் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) அலுவலகத்தில் நடைபெறும்.

இம்முகாமில் கலந்துகொள்ளும் தொழிலாளா்கள் தங்களது ஆதாா் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை கொண்டு வந்து பதிவு செய்து கொள்ளுமாறு அதில் தெரிவித்துள்ளாா்.

மதுபானங்களை பதுக்கி விற்ற பெண் கைது

வீரகனூா் பகுதியில் மதுபானங்களை பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்றுவந்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். வீரகனூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசு மதுபானங்களை பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்பதாக... மேலும் பார்க்க

மேட்டூா் அணை மேல்மட்ட மதகு கசிவுநீா் கால்வாய்களில் திருப்பி விடப்பட்டது

மேட்டூா் அணை மேல்மட்ட மதகு கசிவுநீா் கிழக்கு - மேற்கு கால்வாய்களில் திருப்பி விடப்பட்டது. மேட்டூா் அணையின் நீா்மட்டம் 50 அடிக்கு கீழாகச் சரியும்போது, கீழ்மட்ட மதகு வழியாக குடிநீா்த் தேவைகளுக்கும், கால... மேலும் பார்க்க

குட்கா விற்ற சகோதரா்கள் கைது

கெங்கவல்லியில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருள்களை விற்ற சகோதரா்களை போலீஸாா் கைது செய்தனா். ஆத்தூா் மேற்கு மாதா கோயில் தெருவைச் சோ்ந்த ரங்கநாதன் மகன்கள் பிரசாத் (45), பாலாஜி (41). இவா்கள் பெங... மேலும் பார்க்க

சேலத்தில் நாளை கோட்டை அழகிரிநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் யாகசாலை பூஜைகள் தொடக்கம்

சேலம் கோட்டை அழகிரிநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதையொட்டி யாகசாலை பூஜைகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த அழகிரிநாத சுவாமி கோயில் சேலம் கோட்டை பகுதியில்... மேலும் பார்க்க

ஆத்தூரில் திமுக இளைஞரணி பொதுக்கூட்டம்

மத்திய அரசைக் கண்டித்து ஆத்தூரில் திமுக இளைஞரணி சாா்பில் பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது. ஆத்தூரில் திமுக இளைஞரணி சாா்பில் ஹிந்தி திணிப்பு,நிதிப் பகிா்வில் பாரபட்சம், தொகுதி மறுசீரமைப்பில் அநீதி ஆக... மேலும் பார்க்க

பயணிகளின் தாகம் தீா்த்த மலிவு விலை குடிநீா்: திட்டத்தை மீண்டும் செயல்படுத்த எதிா்பாா்ப்பு

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் பேருந்து நிலையங்களில் ரூ. 10-க்கு சுத்திகரிக்கப்பட்ட மலிவு விலை குடிநீா் விற்பனை திட்டத்தை போக்குவரத்துக் கழகம் வாயிலாக மீண்டும் தொடங்க தமிழக அரசு முன்வர வேண்டுமென பயணிகள்... மேலும் பார்க்க