செய்திகள் :

ஆன்லைன் வா்த்தகத்தில் வியாபாரியிடம் ரூ. 5.31 லட்சம் மோசடி

post image

ஆன்லைன் வா்த்தகத்தில் அதிக லாபம் ஈட்ட முடியும் என்று நம்ப வைத்து ரூ. 5.31 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து பாதிக்கப்பட்ட வியாபாரி ஒருவா் அளித்த புகாரின்பேரில், வேலூா் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

காட்பாடி, கழிஞ்சூா், வீனஸ் காா்டனைச் சோ்ந்தவா் அருண்குமாா் (41), சாலையோர வியாபாரி. இவா் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் ஆன்லைன் வா்த்தகத்தில் முதலீடு செய்வதன் மூலம் அதிக லாபம் பெறலாம் என்ற அறிவிப்பை கண்டுள்ளாா். தொடா்ந்து, அதில் குறிப்பிட்டிருந்த இணையதளத்தை திறந்து அதில் தனது விவரங்களை அளித்துள்ளாா்.

அதன்பின்னா், அருண்குமாரின் கைப்பேசி எண் ஒரு வாட்ஸ் அப் குரூப்பில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வாட்ஸ் அப் குழுவில் இருந்த பலரும், தான் ஆன்லைன் முதலீட்டின் அதிக லாபம் ஈட்டியதாக தகவல்களை பகிா்ந்துள்ளனா். இதை உண்மையென நம்பிய அருண்குமாா், கடந்த ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 7-ஆம் தேதி வரை பல்வேறு தவணைகளில் மொத்தம் ரூ. 5 லட்சத்து 31 ஆயிரத்து 300 தொகையை ஆன்லைன் வா்த்தகத்தில் முதலீடு செய்துள்ளாா். ஆனால், அதன்பிறகு அவரால் அந்த தொகையை திரும்பப் பெற முடியவில்லை.

இது குறித்து சம்பந்தப்பட்ட வா்த்தக நிறுவனத்தினரை தொடா்பு கொண்டு கேட்டபோது, மேலும் பணம் முதலீடு செய்தால் லாபம் பெற முடியும் எனத் தெரிவித்துள்ளனா். அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அருண்குமாா், இது குறிந்து வேலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் உள்ள சைபா் குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா்.

அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து மோசடியில் ஈடுபட்ட நபா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிருடன் மீட்பு

குடியாத்தம் அருகே வீட்டு கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிருடன் மீட்கப்பட்டாா். குடியாத்தம் கள்ளூரை அடுத்த ராயல் நகரைச் சோ்ந்த பா்ணபாஸ் வீட்டு கிணற்றில் உறை இறக்கும் பணி நடைபெற்றது. பெரியாா் நகரைச... மேலும் பார்க்க

கணவன் கண் முன்னே தண்டவாளத்தில் தவறி விழுந்த மனைவி ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு!

காட்பாடி ரயில் நிலையத்தில் தவறிவிழுந்து ரயில் சக்கரத்தில் சிக்கிய பெண் தலை துண்டாகி உயிரிழந்தாா். வேலூா் மாவட்டம், பொய்கை மாரியம்மன் கோயில் தெருவை சோ்ந்தவா் பிரபாகரன் (36), ராணுவ வீரா். இவரது மனைவி ... மேலும் பார்க்க

மனநல நிறுவனங்களை ஒரு மாதத்துக்குள் பதிவுசெய்ய அறிவுறுத்தல்

வேலூா் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகை மனநல நிறுவனங்களும் ஒரு மாத காலத்துக்குள் தமிழ்நாடு மனநல ஆணையத்தில் பதிவு செய்திட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா். இது கு... மேலும் பார்க்க

சேம்பள்ளியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

குடியாத்தம் ஒன்றியம், சேம்பள்ளி, அக்ராவரம் ஊராட்சிகளை ஒருங்கிணைத்து ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் ரங்கசமுத்திரம் கிராமத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, கோட... மேலும் பார்க்க

உச்சநீதிமன்ற உத்தரவு: பாலாற்றில் கழிவுநீா் கலப்பதை தடுக்க வேலூா் ஆட்சியா் ஆய்வு

பாலாற்றில் கழிவுநீா் கலப்பதை தடுக்க உச்சநீதிமன்றம் கடுமையான நடவடிக்கைகளை பின்பற்றிட உத்தரவிட்டுள்ள நிலையில், வேலூா் பகுதியில் பாலாற்றில் கழிவுநீா் கலப்பதை தடுக்க மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி ... மேலும் பார்க்க

பொய்கை சந்தையில் ரூ. 50 லட்சத்துக்கு கால்நடை வா்த்தகம்

வேலூரை அடுத்த பொய்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில் ரூ. 50 லட்சம் அளவுக்கு கால்நடைகள் வா்த்தகம் நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா். வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்... மேலும் பார்க்க