செய்திகள் :

'ஆபரேஷன் சிந்தூர் குறித்து...' - பாஜக முதல்வர்களுக்கு மோடி கண்டிஷன்

post image

டெல்லியில் பாஜக ஆளும் மாநிலங்கள் மற்றும் பாஜக கூட்டணியில் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களின் சந்திப்பு நடந்தது. இந்தச் சந்திப்பிற்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார்.

அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து பேசிய மோடி, முக்கியமாக, ஆபரேஷன் சிந்தூர் குறித்து முன் தயாரிப்பு இல்லாமல் எந்தக் கருத்தையும் பேசாதீர்கள் என்றும், தேவையில்லாமல் எதைக் குறித்துமே கருத்துகளைத் தெரிவிக்க வேண்டாம் என்றும் அறிவுரை வழங்கி உள்ளார்.

பாஜக, பாஜக கூட்டணி முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி
பாஜக, பாஜக கூட்டணி முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி

அமைச்சர் விஜய் ஷா

மத்திய பிரதேசம் ஆளும் பாஜக கட்சியைச் சேர்ந்தவர் அமைச்சர் விஜய் ஷா. அவர் சமீபத்தில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து பேசியிருந்தார். அதில் கர்னல் சோபியா குரேஷியை "பாகிஸ்தானின் சகோதரியை வைத்தே பதிலடி நடத்தி உள்ளோம்" என்று பேசினார். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்ப, உச்ச நீதிமன்றம் இவரது பேச்சைக் கடுமையாகக் கண்டித்தது.

எம்.பி ராம் சந்தர் ஜங்கரா

பாஜகவின் ராஜ்யசபா எம்.பி ராம் சந்தர் ஜங்ரா பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல் குறித்து பேசும்போது...

"பஹல்காமில் கணவனை இழந்த பெண்களுக்கு போர் குணம் இருக்கவில்லை. அங்கே இறந்தவர்களின் கை கட்டுப்பட்டு இருந்ததால், தீவிரவாதிகள் அவர்களை விட்டு வைக்கவில்லை. இறந்தவர்களுக்கு கைகள் கட்டுப்போட்டு இருந்தது. அவர்கள் (அக்னிவீர்) திட்டத்தில், பயிற்சி பெற்றிருந்தால், அந்த 26 பேரை தீவிரவாதிகள் கொன்றிருக்க மாட்டார்கள்" என்று கூறியிருந்தார்.

இதுவும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்த மாதிரி தேவையில்லாத கருத்துகளை அரசியல் தலைவர்கள் பேசக்கூடாது என்று தான் மோடி நேற்று நடந்த சந்திப்பில் அறிவுறுத்தி உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

'ஒரு நாள் Promotion' - ஓய்வுபெறும் நாளில் பதவி உயர்வு அளிக்கும் மத்திய அரசு; பின்னணி என்ன?

முதல்வன் படத்தில் அர்ஜுன் எப்படி 'ஒரு நாள் முதல்வர்' ஆவாரோ, அதேபோல, மத்திய அரசும் 'ஒரு நாள் பதவி உயர்வு' திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.என்ன திட்டம்? நீண்ட காலமாக ஒரு துறையில் பணிபுரிந்து வருபவர... மேலும் பார்க்க

Kashmir: "தேசப்பற்றுடன் இருப்பது அவ்வளவு கடினமா?" - காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் கேள்வி

காங்கிரஸின் மூத்த தலைவரான சல்மான் குர்ஷித், கடந்த வெள்ளிக்கிழமை, இந்தோனேசியாவில் உரையாற்றி இருந்தார். அங்கே அவர், "அரசியலமைப்பு பிரிவு 370-ன் கீழ், ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து, இந்... மேலும் பார்க்க

DMK: "மதுரைக்காரர்கள் என்றால் திமுக தலைமைக்குப் பிடிக்காது" - செல்லூர் ராஜூ சொல்லும் காரணம் என்ன?

"மதுரையில் திமுகவின் பொதுக்குழு எப்போதெல்லாம் கூடுகிறதோ அப்போதெல்லாம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு வர முடியாது" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார்.இன்று செய்தியாளர்களிடம் பே... மேலும் பார்க்க

மதராஸி கேம்ப்: "ஆயிரக்கணக்கான தமிழர்கள் வீதியில் தங்கும் நிலை" - BJPக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்

தலைநகர் புது டெல்லியில் ஜங்க்ப்புரா பகுதியில் உள்ள மதராஸி கேம்ப் பகுதியில் ஆண்டாண்டு காலமாக வசித்துவரும் தமிழர்களின் வீடுகள், நீர்நிலைப் பகுதி ஆக்கிரமிப்பு என்று கூறி, உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அ... மேலும் பார்க்க

'தகுதியற்ற பட்டங்கள்; தேசிய கல்விக்கொள்கையை ஏற்று தான் ஆக வேண்டும்!' - மீண்டும் அரசை சீண்டும் ஆளுநர்

தமிழக ஆளுநராக ரவி பொறுப்பேற்றது முதல் தமிழக அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் இழுத்தடித்து விவகாரம் நீதிமன்றம் வரையில் சென்... மேலும் பார்க்க

"கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமல்" - உதயநிதி உடல்நிலை குறித்து தமிழக அரசு என்ன சொல்கிறது?

கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமலால் அவதிப்படுவதால், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்ள இருந்த அரசு நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்று தமிழ்நாடு அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட... மேலும் பார்க்க