செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூர்: வெளிநாட்டு ஊடகங்களை விமர்சித்த அஜித் தோவல்!

post image

ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செய்திகளை வெளியிட்ட வெளிநாட்டு ஊடக நிறுவனங்களை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பங்கேற்றுள்ளார்.

நிகழ்வில் பேசிய அவர், "ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் வெறும் 23 நிமிடங்களில் நடத்தி முடிக்கப்பட்டது. பாகிஸ்தானின் 9 முக்கிய தீவிரவாத முகாம்கள் குறிவைத்து தாக்கி அழிக்கப்பட்டன. அந்த முகாம்கள் எல்லையில் இருப்பது அல்ல. பாகிஸ்தானின் முக்கிய பகுதிகளில் உள்ளவை.

பாகிஸ்தான், இந்தியாவில் நுழைந்து தாக்கியது, அதைச் செய்தது, இதைச் செய்தது என்று பாகிஸ்தான் ஊடகங்களும் வெளிநாட்டு ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டன. அவர்கள் ஒரு சாட்டிலைட் புகைப்படத்தையாவது செய்திகளில் காட்டினார்களா? ஆனால், நாம் பாகிஸ்தானை தாக்கிய ஆதாரங்களை உலகிற்கு காட்டினோம். நாம் ஏற்படுத்திய பல சேதாரங்களை இன்னும் நாம் முழுமையாக வெளியில் சொல்லவில்லை.

இந்தியாவின் தாக்குதலில் சேதமடைந்த பாகிஸ்தானின் விமானப்படைத் தளங்கள் இன்னும் சரிசெய்யப்படவில்லை.

பாதுகாப்புத் துறைக்காக இந்தியாவில் அதிகளவில் நிதி ஒதுக்கப்படுகிறது. நம்முடைய தொழில்நுட்பத்திற்காக நாம் பெருமைப்பட வேண்டும். சிறந்த கல்வி, தொழில்நுட்பம் கொண்ட நாடாக இந்தியா மாறியுள்ளது" என்று பேசியுள்ளார்.

NSA Ajit Doval slams the foreign media for their reportage on the operation sindoor, Speaking IIT Madras,

ஒரே அம்பு, இரு இலக்குகள்! மோடிக்கு மட்டும் 75 வயது ஆகவில்லை! - ஜெயராம் ரமேஷ்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலை மெழுகு அச்சு எடுத்ததாகப் புகார்!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலையை, மெழுகு அச்சு எடுத்ததாக எழுந்த புகார் தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் ஏகாம்பரநாதர் கோயிலில் விசாரணை நடத்தினர்.மெழுது அச்சு எட... மேலும் பார்க்க

உலக பாரம்பரிய சின்னமாக செஞ்சி கோட்டை! முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி!

செஞ்சி கோட்டையை பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அங்கீகரித்தது மகிழ்ச்சியளித்திருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.இதுகுறித்து, அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "கிழக்கின் ட்ராய்" என்றழைக்கப்படும் செஞ்சி ... மேலும் பார்க்க

செஞ்சிக்கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்: முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி

தமிழ்நாட்டில் உள்ள செஞ்சிக்கோட்டைக்கு யுனெஸ்கோ சின்னம் என்ற அங்கீகாரம் கிடைத்தது பெருமகிழ்ச்சி என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், கிழக்கின் ட்ராய் என அறியப... மேலும் பார்க்க

தவெக போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படவில்லை- சென்னை காவல் ஆணையர்

தவெக போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படவில்லை என்று சென்னை காவல் ஆணையர் அருண் விளக்கமளித்துள்ளார். சென்னை வேப்பெரியில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தவெக போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படவ... மேலும் பார்க்க

வெள்ளை சட்டையுடன் 4 ரீல்ஸ் போட்டால் தலைவனா? யாரைச் சொல்கிறார் அண்ணாமலை?

ஒரு தலைவனுக்கு பழிவாங்கும் நோக்கு இருக்கக் கூடாது என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.சென்னை உத்தண்டியில் இன்று நடைபெற்ற அரசியல் பயிலரங்கம் நிகழ்ச்சியில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கலந்துகொண... மேலும் பார்க்க

2026-ல் திமுக கூட்டணி வீட்டிற்கு அனுப்பப்படும்: நயினார் நாகேந்திரன்

2026-ல் திமுக கூட்டணி வீட்டிற்கு அனுப்பப்படும் என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.மதுரையில் இன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசுகையில், தமிழகத்தில் ஒரு தவறு நடைபெறுகிறது... மேலும் பார்க்க