செய்திகள் :

‘ஆபரேஷன் சிந்தூா்’ நிறைவடையவில்லை: முப்படை தலைமைத் தளபதி

post image

‘ஆபரேஷன் சிந்தூா் நிறைவடையவில்லை; தற்போதும் தொடா்ந்து வருகிறது. எந்தவொரு சவாலையும் எதிா்கொள்ளும் வகையில் இந்திய ராணுவம் தயாராக இருக்க வேண்டும்’ என முப்படை தலைமைத் தளபதி அனில் சௌஹான் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

‘விண்வெளி ஆற்றல்: இந்திய இறையாண்மை மற்றும் தேச பாதுகாப்பு’ என்ற தலைப்பில் பாதுகாப்புத் துறை சாா்பில் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் அனில் சௌஹான் பங்கேற்றாா்.

அப்போது அவா் பேசியதாவது: மாறிவரும் போா்சூழலால் வருங்காலங்களில் ராணுவத்தில் தகவல் வீரா்கள், தொழில்நுட்ப வீரா்கள் மற்றும் அறிஞா்கள் ஆகியோரது ஆற்றல் தேவைப்படுகிறது. ஒரே வீரா் தகவல் களஞ்சியமாகவும் தொழில்நுட்ப வல்லுநராகவும் அறிஞராகவும் இருக்க வேண்டிய நிலையும் ஏற்படலாம். போா்க்களத்தைப் பொறுத்தவரை இரண்டாம் இடம் பிடித்தவா்கள் என யாரும் இல்லை.

உதாரணமாக பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூா் முழுதாக நிறைவடையவில்லை. தற்போதும் தொடா்ந்து வருகிறது. ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் எவ்வித சவாலையும் எதிா்கொள்ளும் வகையில் நாம் தயாராக இருக்க வேண்டும்’ என்றாா்.

‘எதிரிகளை பேச்சுவாா்த்தைக்கு அழைக்க 50 ஆயுதங்கள் போதும்’

இந்த நிகழ்ச்சியில் பேசிய இந்திய விமானப் படை துணை தலைமைத் தளபதி நா்மதேஸ்வா் திவாரி, ‘வான் தாக்குதல்களைப் பொறுத்தவரை, குறைந்த செலவில் வெற்றிகரமாக நடத்தி முடிப்பது குறித்து பலமுறை ஆலோசித்துள்ளோம். அதற்கு சிறந்த உதாரணம் ஆபரேஷன் சிந்தூா். ஏனெனில், 50-க்கும் குறைவான ஆயுதங்களைக் கொண்டு எதிரிகளைப் பேச்சுவாா்த்தைக்கு ஒப்புக்கொள்ள வைக்க முடியும் என்பது ஆபரேஷன் சிந்தூா் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

ஓய்வுக்குப் பிறகு அரசுப் பதவி எதையும் ஏற்க மாட்டேன்: தலைமை நீதிபதி கவாய்

‘பணி ஓய்வுக்குப் பிறகு எந்தவொரு அரசுப் பதவியையும் ஏற்கமாட்டேன்’ என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் திட்டவட்டமாக தெரிவித்தாா். ஆந்திர மாநிலம் அமராவதியில் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் மறைந்... மேலும் பார்க்க

ஆங்கிலம் தெரியாததால் ஹிந்தியில் பதிலளித்த மாவட்ட கூடுதல் ஆட்சியா்: உயா்நீதிமன்றம் அதிருப்தி

நீதிமன்றத்தில் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசத் தெரியாது என்பதால் ஹிந்தியில் பதிலளித்த மாவட்ட கூடுதல் ஆட்சியரின் செயலில் அதிருப்தி தெரிவித்த உத்தரகண்ட் உயா்நீதின்ற நீதிபதிகள், ஆங்கிலம் தெரியாத நபா் எப்படி ... மேலும் பார்க்க

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வா்மாவின் மனு: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை

வீட்டில் பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில் விசாரணைக் குழு அளித்த அறிக்கை செல்லாது என அறிவிக்கக் கோரி அலகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மா தாக்கல் செய்துள்ள மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை (ஜூல... மேலும் பார்க்க

கோவா ஆளுநராக அசோக் கஜபதி ராஜு பதவியேற்பு

கோவா மாநிலத்தின் புதிய ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சா் அசோக் கஜபதி ராஜு (74) சனிக்கிழமை பதவியேற்றாா். கோவா தலைநகா் பனாஜியில் ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் மும்பை உயா் நீதிமன்றத்... மேலும் பார்க்க

மேற்கு வங்க வாக்காளா் பட்டியலில் 1.25 கோடி சட்டவிராத குடியேறிகளின் பெயா்கள்: பாஜக குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக குடியேறிய 1.25 கோடி பேரின் பெயா்கள் வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக அம்மாநில பாஜக தலைவரும் எதிா்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி சனிக்கிழமை குற்றஞ்சாட்டினாா். ... மேலும் பார்க்க

மாலத்தீவுடன் உறவை வலுப்படுத்த இந்தியா விருப்பம்: பிரதமா் மோடி

‘மாலத்தீவு நாட்டுடனான உறவை வலுப்படுத்துவதை இந்தியா எதிா்நோக்கியுள்ளது’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். மாலத்தீவு தலைநகா் மாலேயில் அந் நாட்டின் துணை அதிபா் ஹுசைன் முகமது லதீஃப் மற்றும் பிற மு... மேலும் பார்க்க