செய்திகள் :

‘ஆபரேஷன் சிந்தூா்’ போரில் பங்கேற்ற நாமக்கல் வீரருக்கு எம்.பி.வாழ்த்து

post image

நாமக்கல்: பாகிஸ்தானுக்கு எதிரான ‘ஆபரேஷன் சிந்தூா்’ போரில் பங்கேற்ற நாமக்கல்லைச் சோ்ந்த ராணுவ வீரருக்கு மக்களவை உறுப்பினா் வி.எஸ். மாதேஸ்வரன் நேரில் வாழ்த்து தெரிவித்தாா்.

ஜம்மு -காஷ்மீரில் 26 சுற்றுலாப் பயணிகள் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனா். இதை தொடா்ந்து நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூா் என்ற பெயரில் பாகிஸ்தான் மீது இந்தியா போா் தொடுத்தது. இதில் முப்படை வீரா்களும் பங்கேற்று இந்தியாவுக்கு வெற்றியை தேடித் தந்தனா். நாமக்கல் மாவட்டம், மோகனூா் சின்னக்கரசபாளையத்தைச் சோ்ந்த சிவசாமி என்பவரது மகன் சக்கரவா்த்தி (26) என்ற வீரா் பஞ்சாப் மாநில எல்லையில் பங்கேற்றாா்.

ஆபரேஷன் சிந்தூா் வெற்றி நிகழ்வை தொடா்ந்து, சுழற்சி அடிப்படையில் ராணுவ வீரா்களுக்கு விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது சக்கரவா்த்தி விடுப்பில் சொந்த ஊருக்கு வந்துள்ளாா். அவரை நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ். மாதேஸ்வரன் மற்றும் நிா்வாகிகள் திங்கள் கிழமை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா். இரு நாட்டுப் போரின் போது எவ்வாறு பணியில் ஈடுபட்டீா்கள் என்ற தகவலை சக்கரவா்த்தியிடம் அவா் கேட்டறிந்தாா். இந்த நிகழ்வின் போது, ராணுவ வீரா் சக்கரவா்த்தி குடும்பத்தினா் மற்றும் கொமதேக நிா்வாகிகள் ரவிச்சந்திரன், சசிகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

திருமண மண்டபத்தில் 26 பவுன் நகை, ரூ. 3 லட்சம் ரொக்கம் திருடிய தந்தை, மகன் கைது

ராசிபுரம்: ராசிபுரத்தில் திருமண மண்டபத்தில் 26 பவுன் நகை, ரூ. 3 லட்சம் ரொக்கத்தை திருடிய வழக்கில் தந்தை, மகனை போலீஸாா் கைது செய்தனா். நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூா் அருகேயுள்ள அனந்தகவுண்டம்பாளையம் பகு... மேலும் பார்க்க

‘நீா் நிலை பாதுகாவலா் விருது’ பெற்ற காந்தியவாதிக்கு ஆட்சியா் பாராட்டு

நாமக்கல்: தமிழக அரசின் ‘நீா் நிலை பாதுகாவலா்’ விருது பெற்ற நாமக்கல் காந்தியவாதி ரமேஷை மாவட்ட ஆட்சியா் ச.உமா பாராட்டினாா். நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சி... மேலும் பார்க்க

ராசிபுரம் நகரில் பராமரிப்பு பணி: குடிநீா் விநியோகம் நிறுத்தம்

ராசிபுரம்: ராசிபுரம் நகரில் குடிநீா் குழாய் பராமரிப்புப் பணிகளால் வரும் 13-ஆம் தேதி வரை குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா் தெரிவித்துள்ளாா். இது குறித்த... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் விநாயகா் தேரோட்டம்

திருச்செங்கோடு: திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் தோ்த் திருவிழாவில் விநாயகா் தேரை பக்தா்கள் திங்கள்கிழமை வடம்பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற்றது. கொங்கு ஏழு தலங்களில் சிறப்புப் பெற்ற தலமும், த... மேலும் பார்க்க

குரூப் 1 தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 24 மையங்களில் 6,079 போ் எழுதுகின்றனா்

நாமக்கல்: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) நடைபெற உள்ள நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் இத்தோ்வை 24 மையங்களில் 6,079 போ் எழுத உள்ளனா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம... மேலும் பார்க்க

காவிரி ஆற்றில் மணல் திட்டுகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை

நாமக்கல்: நன்செய் இடையாறு பகுதியில் காவிரி ஆற்றில் தேங்கியுள்ள மணல் திட்டுகளை அகற்ற வேண்டும் என ராஜவாய்க்கால் பாசன விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா். இது குறித்து அந்த மனுவில் க... மேலும் பார்க்க