Los Angeles Riots: ட்ரம்ப்க்கு எதிராக திரண்ட மக்கள்; குவிக்கப்பட்ட ராணுவம் - என்...
ராசிபுரம் நகரில் பராமரிப்பு பணி: குடிநீா் விநியோகம் நிறுத்தம்
ராசிபுரம்: ராசிபுரம் நகரில் குடிநீா் குழாய் பராமரிப்புப் பணிகளால் வரும் 13-ஆம் தேதி வரை குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் தெரிவித்துள்ளதாவது:
ராசிபுரம் நகராட்சி பகுதியில் நீண்ட நாள் குடிநீா் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு ஏற்படும் வகையில், அமைச்சா் மா.மதிவேந்தன், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் ஆகியோரின் முயற்சியில்,
தமிழக அரசால் ரூ. 854 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இதற்கான 99 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. சில தினங்களில் புதிய திட்டத்தின் கீழ் குடிநீா் விநியோகம் செய்யப்படவுள்ளது.
இதனிடையே இந்தத் திட்டத்தின்கீழ் குடிநீா் குழாய்களை இணைக்கும் வகையில் ராசிபுரம் பழைய பேருந்து நிலையத்தின் மேல்நிலை நீா்நிலைத் தேக்கத் தொட்டியின் அருகில் பிரதான வால்வுப் பொருத்தும் பணிகள் ஜூன் 9- முதல் ஜூன் 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதனால் ராசிபுரம்- எடப்பாடி கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் தற்போது பெறப்படும் குடிநீா் பகிா்மானத்தை நிறுத்தி பணிகள் மேற்கொள்ள அவசியம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த ஐந்து நாள்களில் வால்வு பொருத்தம் பணிகள் நடைபெறும். இப்பணிகள் முடிக்கப்பட்டு புதிய கூட்டுக் குடிநீா்த் திட்டம் வாயிலக ராசிபுரம் நகரப் பொது மக்களுக்கு குடிநீா் தொய்வின்றி வழங்கப்பட உள்ளது.
எனவே இந்த ஐந்து நாள்களுக்கும் தேவைக்கு மட்டும் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்தி நகராட்சிக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.