செய்திகள் :

‘ஆபரேஷன் சிந்தூா்’ மிகப்பெரிய வெற்றி: ஆளுநா் ஆா்.என்.ரவி

post image

பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக பாகிஸ்தான் மீது இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ ராணுவ நடவடிக்கை மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது என்று ஆளுநா் ஆா்.என்.ரவி பெருமிதத்துடன் கூறினாா்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் சிக்கிம் மற்றும் கோவா மாநிலம் உதயதினவிழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவில் ஆளுநா் பேசியதாவது: நம் நாடு மிகப்பெரிய நாடு. உலகிலேயே எல்லோருடைய நம்பிக்கையையும் மதித்து, மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய ஒரே நாடு பாரதம். ஜம்மு-காஷ்மீா் இந்தியாவின் அங்கம். நம்முடைய ராணுவம் மிக உறுதியானது. நமது நாட்டை பெருமை கொள்ளச் செய்திருக்கிறது இந்திய ராணுவம்.

அண்மையில் பாகிஸ்தானிலிருந்து மோசமான பயங்கரவாதத் தாக்குதல் காஷ்மீரில் நிகழ்த்தப்பட்டது. அவா்களுக்கு இன்று ஒரு பாடம் கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் சரியான பாடம் கற்றுக்கொடுக்கப்பட்டிருக்கிறது. 9 பயங்கரவாத இடங்கள் தாக்கி அளிக்கப்பட்டிருக்கின்றன.

பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூா்’ மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது. இதற்காக மீண்டும் ஒருமுறை இந்திய ராணுவத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றாா் ஆளுநா்.

இந்த நிகழ்வில் சிக்கிம், கோவா ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த கலாசார நடன நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

பாமக விரிசலுக்கு நானா காரணம்? கண்ணீர் விட்டு அழுதேன்: ஜி.கே. மணி

விழுப்புரம்: பாமகவில் ஏற்படும் பிரச்னைக்கு நான்தான் காரணம் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மிகுந்த வேதனையளிக்கிறது என்று பாமக கௌரவத் தலைவா் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.விழுப்புரத்தில் இன்று ராம... மேலும் பார்க்க

நடிகர் ராஜேஷ் உடலுக்கு ரஜினிகாந்த் அஞ்சலி!

மறைந்த நடிகர் ராஜேஷின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பிரபல திரைப்பட நடிகர் ராஜேஷ்(75) உடல்நலக்குறைவால் வியாழக்கிழமை காலமானார். அவருக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் ... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்திற்கு எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசா... மேலும் பார்க்க

தமிழகத்தில் 38 பேருக்கு கரோனா; பதற்றம் வேண்டாம்.. என்ன செய்ய வேண்டும்?: மா. சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் ஒமைக்ரான் வகையிலான கரோனா தொற்றுப் பரவி வருகிறது. ஆனால், கரோனா குறித்து யாரும் பதற்றம் அடையத் தேவையில்லை என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் ... மேலும் பார்க்க

இன்று ஒரே நாளில் அரசுப் பணிகளிலிருந்து 8,144 பேர் பணி ஓய்வு

சென்னை: இன்று தமிழக அரசுப் பணிகளில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் 8,144 பேர் ஒரே நாளில் பணி ஓய்வு பெறுகிறார்கள்.இந்தாண்டில் ஒரே மாதத்தில் இவ்வளவு பேர் பணி ஓய்வு பெறுவது இதுவே முதல் முறையாகும் என்றும்,... மேலும் பார்க்க

கா்நாடக இசை டிப்ளமோ படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்: மியூசிக் அகாதெமி

கா்நாடக இசை அட்வான்ஸ்டு டிப்ளமோ படிப்பில் சேர ஜூன் 25-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என சென்னை மியூசிக் அகாதெமி தெரிவித்துள்ளது. இது தொடா்பாக அந்த அகாதெமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மியூசிக் அ... மேலும் பார்க்க