`எங்க மனநிலையையும் புரிந்துக்கொள்ளுங்கள்!’ - குழந்தை குறித்த கேள்விகளுக்கு சாந்தனு - கிகி பதில்
இயக்குநர் பாக்கியராஜ், நடிகை பூர்ணிமா ஆகியோரின் மகன் சாந்தனு. இவர் தமிழ் சினிமாவில் சக்கரகட்டி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பின்னர் சித்து பிளஸ் 2, அம்மாவின் கைபேசி, இராவண கோட்டம் என பல படங்களில் நடித்திருந்தார்.
சமீபத்தில் அவர் நடிப்பில் ப்ளூ ஸ்டார் திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகர் சாந்தனு, கிகி என்ற கீர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பள்ளி படிக்கும் போதிலிருந்தே கீர்த்தியை காதலித்த சாந்தனு இறுதியில் 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
கிகி தொகுப்பாளியாக பணியாற்றி வருகிறார். இதற்கிடையில் திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆன போதிலும் தங்களுக்கு குழந்தை இல்லை என்ற கேள்விகள் அடிக்கடி வருவதாகவும், அது குறித்து வெளிப்படையாக தங்களது youtube சேனலில் பேசி இருக்கின்றனர் சாந்தனும் - கிகி தம்பதியினர்.
இது குறித்து இருவரும் கூறுகையில், ”உண்மையிலேயே எங்கள் மீது அக்கறை வைத்து பலரும் எங்களுக்கு குழந்தை இல்லை என்று கேட்கிறார்கள். ஆனால் சிலர் கேட்க வேண்டும் என்பதற்காகவே சும்மா கமெண்டில் வந்து குழந்தை எப்போது என்ற கேள்வியை கேட்கிறார்கள்.
நாங்கள் எப்போது குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் சொல்லுங்கள் அல்லது குழந்தை பெற்ற பின்பு நீங்கள் குழந்தையை பார்த்துக் கொள்ளும் பேபி சிட்டர் ஆக வருகிறீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

``நாங்கள் பேசுவதை ரூடாக பேசுகிறோம் என்று நினைக்க வேண்டாம், எங்களுடைய மனநிலையையும், நாங்கள் எந்த மாதிரியான சூழலை எதிர்கொள்கிறோம் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எல்லாவற்றிற்கும் ஒரு நேரம் இருக்கிறது, கடவுள் எப்போது எங்களுக்கான குழந்தை முடிக்கிறாரோ அப்போது அது நடக்கும்.
ஆரம்பத்தில் இது குறித்து நாங்கள் பேசி இருந்தோம் தொடர்ந்து இதே கேள்விகள் 10 வருடங்களாக வரும் போது அதை நாங்கள் தவிர்த்து விட்டோம்.. இப்போது அதற்கு நாங்கள் பதில் கூறியுள்ளோம். உண்மையாகவே அக்கறை கொண்டு கேட்டவர்களுக்கு எங்களுடைய நன்றி” என்று கூறியிருந்தனர்.