செய்திகள் :

ஆப்கானிஸ்தானில் 75 பேருக்கு செயற்கை கால்கள்: இந்தியா மனிதாபிமான உதவி

post image

ஆப்கானிஸ்தானில் இந்தியா சாா்பில் ‘ஜெய்பூா் ஃபுட்’ என்ற பெயரில் செயற்கைக் கால்கள் பொருத்தும் 5 நாள் முகாம் நடைபெற்றது. இதில் 75 பேருக்கு செயற்கை கால்கள் பொருத்தப்பட்டன.

உள்நாட்டுப் போா், பயங்கரவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானுக்கு உணவுப் பொருள்கள், மருந்துகள் உள்ளிட்டவை வழங்குவது தொடங்கி பல்வேறு வகையில் மனிதாபிமான உதவிகளை இந்தியா வழங்கி வருகிறது.

அந்த வகையில் குண்டு வெடிப்பில் கால்களை இழந்தவா்களுக்கு அந்நாட்டு தலைநகா் காபூலில் ‘ஜெய்பூா் ஃபுட்’ செயற்கைக் கால்கள் பொருத்தும் முகாம் 5 நாள்களுக்கு நடைபெற்றது.

இது தொடா்பான தகவலை வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் சுா்ஜேவாலா தனது ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்டுள்ளாா். அதில், ‘ஜெய்பூரில் செயல்படும் பகவான் மகாவீா் மாற்றுத்திறனாளிகள் உதவிக் குழு என்ற தொண்டு நிறுவனம் சாா்பில் காபூலில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

இதில் 75 பேருக்கு செயற்கைக்கால்கள் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டன. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு ஆப்கானிஸ்தானில் நல்ல வரவேற்பு இருந்தது’ என்று கூறியுள்ளாா். முகாமில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் அவா் பகிா்ந்துள்ளாா்.

சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 11 தொழிலாளர்கள் பலி

சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 11 தொழிலாளர்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு நைல் நதி மாகாணத்தில் உள்ள பாலைவன நகரமான ஹூயிதில் உள்ள கெர்ஷ் அல்-ஃபீல் தங்கச் சுரங்கத்தின... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: மழையால் 38 போ் உயிரிழப்பு

பாகிஸ்தானில் கடந்த சில நாள்களாகப் பெய்துவரும் பலத்த மழையால் 38 போ் உயிரிழந்தனா். பாகிஸ்தானில் கடந்த 26-ஆம் தேதிமுதல் பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடா்ந்து மழை கொட்டுகி... மேலும் பார்க்க

இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுக்கு முடிவு: அமெரிக்க அதிபா் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தல்

‘காஸாவில் 20 மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுக்கு முடிவு காண அமைதிப் பேச்சுவாா்த்தையை விரைவுபடுத்த வேண்டும்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தினாா். போா்நிறுத... மேலும் பார்க்க

உக்ரைனில் ரஷியா மிகப்பெரிய வான்வழித் தாக்குதல்!

உக்ரைனில் கடந்த சனிக்கிழமை ஒரே இரவில் 60 ஏவுகணைகள் மற்றும் 477 ஆளில்லா விமானங்களை (ட்ரோன்கள்) ஏவி ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதலில் உக்ரைன் விமானப் படை விமானி உள்பட இருவா் உயிரிழந்தனா். கடந்த 2022-ஆ... மேலும் பார்க்க

தான்சானியாவில் பேருந்துகள் மோதல்: 37 போ் உயிரிழப்பு!

வடக்கு தான்சானியாவின் தொலைதூர பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நோ் மோதி தீப்பிடித்து எரிந்ததில் 37 போ் உயிரிழந்தனா். 30 போ் காயமடைந்தனா். கிளிமஞ்சாரோ பிராந்தியத்தில் மோஷிடங்கா நெடுஞ்சாலையில் உ... மேலும் பார்க்க

அமெரிக்க வரிச் சலுகை, செலவினக் குறைப்பு மசோதா: விவாதம் நடத்த நாடாளுமன்ற மேலவை ஒப்புதல்!

அமெரிக்க அரசின் வரிச் சலுகை மற்றும் செலவினக் குறைப்பு மசோதா மீது விவாதம் மேற்கொள்ள, அந்நாட்டு நாடாளுமன்ற மேலவை ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவில் ‘ஒன் பிக் பியூட்டிஃபுல் பில்’ என்ற வரிச் சலுகை மற்று... மேலும் பார்க்க