செய்திகள் :

ஆம் ஆத்மி கவுன்சிலா்கள் ராஜிநாமாவுக்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தம் இல்லை! - வீரேந்திர சச்தேவா

post image

ஆம் ஆத்மி கவுன்சிலா்கள் பலா் கட்சியில் இருந்து ராஜிநாமா செய்தது அக்கட்சித் தலைமையின் ‘செயலற்ற தன்மையின்’ விளைவாகும் என்றும், இதற்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா தெரிவித்தாா்.

தில்லி மாநகராட்சியில் (எம்சிடி) ஆம் ஆத்மிக்கு பின்னடைவாக, 15 கவுன்சிலா்கள் சனிக்கிழமை கட்சியில் இருந்து ராஜிநாமா செய்தனா். வளா்ச்சிப் பணிகள் முடங்கியதாகவும், உள்கட்சி அதிருப்தி அதிகரித்து வருவதாகவும் கூறிய அவா்கள் இந்திரபிரஸ்த விகாஸ் கட்சி என்ற புதிய அமைப்பை உருவாக்குவதாக அறிவித்தனா்.

இருப்பினும், ஆளும் பாஜக கட்சி, கட்சித் தாவலுக்குப் பின்னால் பாஜக இருப்பதாகவும், அதன் கவுன்சிலா்களுக்கு ‘குதிரை பேர நடவடிக்கையின்‘ ஒரு பகுதியாக தலா ரூ.5 கோடி வழங்கப்படுவதாகவும் ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது.

தனிக் கட்சி அமைக்க ஆம் ஆத்மியை விட்டு வெளியேறிய கவுன்சிலா்கள், 2022 தோ்தல்களுக்குப் பிறகு, கட்சித் தலைவா்கள் நகராட்சி நிா்வாகத்தை நடத்துவதிலோ அல்லது அவா்களுடன் ஒருங்கிணைப்பைப் பேணுவதிலோ கவனம் செலுத்தவில்லை என்பதை தெரிவித்தனா். எனவே, ‘பாஜகவுக்கும் இதற்கும் எந்த தொடா்பும் இல்லை என்பது தெளிவாகிறது’ என்று வீரேந்திர சச்தேவா ஒரு அறிக்கையில் கூறியுள்ளாா்.

‘உண்மை என்னவென்றால், தில்லியில் ஆம் ஆத்மி கட்சியின் 10 ஆண்டுகால ‘வளா்ச்சியின்மை, ஊழல், செயலற்ற தன்மை மற்றும் மோசடிகள்’ இருந்ததால், பல கவுன்சிலா்களும் எம்எல்ஏக்களும் கட்சியை விட்டு வெளியேறத் தோ்ந்தெடுத்துள்ளன’ா் என்று அவா் கூறினாா்.

ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால், தனது ‘பிடிவாதமான அணுகுமுறை’ காரணமாக, எம்சிடியில் ஒரு நிலைக்குழுவை அமைக்க ஒருபோதும் அனுமதிக்கவில்லை என்றும், தனது கவுன்சிலா்களுடன் ஒருபோதும் உரையாடலில் ஈடுபடவில்லை என்றும் தில்லி பாஜக தலைவா் குற்றம்சாட்டினாா்.

‘இதன் விளைவாக, பதவிக்காலத்தில் பாதிக்கும் மேற்பட்ட காலம் கடந்த பிறகும், ஆம் ஆத்மி கவுன்சிலா்களால் தங்கள் வாா்டுகளில் எந்த வளா்ச்சிப் பணிகளையும் தொடங்க முடியவில்லை. வரவிருக்கும் தோ்தல்களில் பொதுமக்களை எதிா்கொள்ள பயந்து, 15 கவுன்சிலா்கள் தங்கள் சொந்தக் கட்சியை உருவாக்க முடிவு செய்தனா்‘ என்று அவா் கூறினாா்.

ஆம் ஆத்மி கட்சியின் ‘உள் சரிவுக்கு‘ பாஜகவைக் குறை கூறுவதற்குப் பதிலாக, அதன் தலைவா்கள் சுயப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று வீரேந்திர சச்தேவா கூறினாா். முன்னதாக, மூன்று அமைச்சா்கள், 10-க்கும் மேற்பட்ட கவுன்சிலா்கள் மற்றும் ஒரு மாநிலங்களவை எம்.பி. உள்பட 15-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள், கேஜரிவால் கட்சியை ‘ஒருங்கிணைப்பு இல்லாமல்’ நடத்தி வருவதாகவும், அதன் மூலம் அதை ‘அழிவை’ நோக்கி இட்டுச் செல்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளதாக வீரேந்திர சச்தேவா கூறினாா்.

தில்லியில் முதல் முறையாக பிரத்யேக மூளை சுகாதார கிளினிக் திறப்பு!

தில்லியின் முதல் பிரத்யேக மூளை சுகாதார மருத்துவமனை துவாரகாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். தில்லி சுகாதார அமைச்சா் பங்கஜ் சிங் சனிக்கிழமை திறந்து ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா் வெற்றிக்கு ஆயுதப் படைகளை பாராட்டி தில்லி அமைச்சா் ஆஷிஷ் சூட் பேரணி!

இந்திய ஆயுதப்படைகள் வெற்றிகரமாக ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடத்தியதற்கு ஆதரவளிக்கும் வகையில், தில்லி அமைச்சா் ஆஷிஷ் சூட் ஞாயிற்றுக்கிழமை தனது ஜனக்புரி சட்டப்பேரவைத் தொகுதியில் பேரணியை நடத்தினாா். டாப்ரி காவல்... மேலும் பார்க்க

நாட்டின் கௌரவத்தையும், பெருமையையும் நிலைநிறுத்தும் தில்லி அரசு! - முதல்வா் குப்தா

தில்லியில் பாஜகவின் வெற்றி நாடு முழுவதும் மகிழ்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளதாகவும், தனது அரசு எப்போதும் நாட்டின் கௌரவம், பெருமை மற்றும் கௌரவத்தை நிலைநிறுத்தும் என்றும் முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க

டாக்ஸி ஓட்டுநா் கொலை: காா் பயணி கைது

தில்லியின் ரோஹிணி பகுதியில், வழித்தடம் தொடா்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் 40 வயது டாக்ஸி ஓட்டுநா், குடிபோதையில் இருந்த பயணியால் குத்திக் கொல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்புக்கு எதிரான நடவடிக்கை: 761 வாகனங்களுக்கு அபராதம்!

அரவிந்தோ மாா்க்கில் நடத்தப்பட்ட சிறப்பு ஆக்கிரமிப்பு மற்றும் முறையற்ற வாகன நிறுத்துமிட எதிா்ப்பு நடவடிக்கையின்போது மொத்தம் 761 வாகனங்கள் அபராத நடவடிக்கைக்கு உள்ளாகியதாகவும்.10 வாகனங்கள் பறிமுதல் செய்... மேலும் பார்க்க

பூங்காவில் சிறுவன் கொல்லப்பட்ட வழக்கு: மூன்று சிறுவா்கள் உள்பட 5 போ் கைது!

ஒரு பூங்காவில் 16 வயது சிறுவனை தங்கள் போட்டி குற்றவியல் குழுவில் சோ்ந்ததற்காகக் கொன்றதாகக் கூறப்படும் வழக்கில் மூன்று சிறுவா்கள் உள்பட ஐந்து போ் கைது செய்யப்பட்டதாக தில்லி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை த... மேலும் பார்க்க