ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட்: அயர்லாந்து 76 ரன்கள் முன்னிலை!
ஆம் ஆத்மி 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும்: கோபால் ராய்
தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு ஒருநாளே உள்ள நிலையில். ஆம் ஆத்மி கட்சி 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கோபால் ராய் தெரிவித்தார்.
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், சனிக்கிழமை காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கவுள்ளது. வெற்றிபெற வாய்ப்புள்ள ஆம் ஆத்மி வேட்பாளர்கள் சிலரை பாஜகவினர் தொலைபேசியில் அழைத்து, தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன்னதாகவே கட்சி மாறினால் ரூ. 15 கோடி அளிப்பதாகப் பேரம் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியினர் எழுப்பிய இந்த குற்றச்சாட்டை விசாரிக்க தில்லி தலைமைச் செயலாளருக்கு துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், இதுதொடர்பாக கோபால் ராய் கூறுகையில்,
தில்லி மக்கள் ஆம் ஆத்மிக்கு தங்கள் ஆணையை வழங்கியுள்ளனர். எனவே ஆம் ஆத்மி அரசு ஆட்சி அமைக்க உள்ளனர். கட்சி வேட்பாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆம் ஆத்மி வெற்றிபெறும்.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை வைத்து பாஜக ஒரு உளவியல் கதையை உருவாக்குவதாகவும், ஆம் ஆத்மி வேட்பாளர்களைப் பணம் கொடுத்து தன்வசம் இழுப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.