செய்திகள் :

ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை: தப்பி ஓட முயன்றவருக்கு எலும்பு முறிவு!

post image

வேலூரில் ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த 4- மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் திருப்பூரில் பனியன் கம்பெனி ஒன்றில் டெய்லராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், நேற்று (பிப்.6) தனது சொந்த ஊரான சித்தூருக்குச் செல்வதற்கு கோயம்புத்தூர்- திருப்பதி இன்டர்சிட்டி விரைவு ரயிலில் பயணம் செய்தபோது அந்தக் கர்ப்பிணி பெண் ரயிலில் உள்ள கழிவறைக்குச் சென்றுள்ளார்.

மகளிர் பெட்டியில் யாரும் இல்லாத நிலையில், அங்கிருந்த இளைஞர் ஒருவர், அந்தப் பெண்ணுக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். கர்ப்பிணி பெண் கூச்சலிட்டதால் ஆத்திரமடைந்த அந்த நபர், கர்ப்பிணியை கே.வி. குப்பம் அருகே ரயிலிலிருந்து கீழே தள்ளிவிட்டுவிட்டு, ரயில் காட்பாடி நிலையம் வந்ததும் இறங்கிச் சென்றுள்ளார்.

ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டதில், கர்ப்பிணிக்கு கை, கால் முறிவு ஏற்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சம்பவத்தில் குற்றப்பின்னணி கொண்ட ஹேமராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட ஹேமராஜ் போலீசாரிடம் இருந்து தப்பித்து ஓடியதில் கால் தடுக்கி அருகே உள்ள பள்ளத்தில் விழுந்துள்ளார். இதனால், அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தற்போது அவர் திருப்பத்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பெண்கள், குழந்தைகளைப் பாதுகாத்திட சட்டத்தை கடுமையாக்க வேண்டும்: சீமான்

பாலியல் குற்றங்களில் இருந்து பெண்கள், குழந்தைகளைப் பாதுகாத்திட சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில... மேலும் பார்க்க

மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க நிரந்தரத் தீர்வு வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சமூக வலைதளப் பதிவில், இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து தாக்... மேலும் பார்க்க

பொறியியல் பணி: இரு ரயில்கள் ரத்து

வேலூர் மாவட்டம், காட்பாடி யார்டில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், ஒரு ரயில் பகுதியளவிலும், 2 ரயில்கள் முழுமையாகவும் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திர... மேலும் பார்க்க

திண்டுக்கல் டிஐஜி வந்திதா பாண்டே மத்திய அரசு பணிக்கு மாற்றம்!

திண்டுக்கல் டிஐஜி வந்திதா பாண்டேவை மத்திய அரசு பணிக்கு மாற்றி உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.மத்திய இளைஞர் விவகார அமைச்சகத்தின் இயக்குநராக வந்திதா பாண்டேவை நியமித்துள்ளதாகவும், உடனடியாக ம... மேலும் பார்க்க

மணப்பாறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை: ஈபிஎஸ் கண்டனம்

மணப்பாறையில் 4ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், திருச்சி மாவட்டம் மணப... மேலும் பார்க்க

ரயிலில் பாலியல் தொல்லை- மகளிர் ஆணையம் கண்டனம்

ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. வேலூர் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, ரயிலில் இருந்து கீழ... மேலும் பார்க்க