செய்திகள் :

தரமான சானிட்டரி நாப்கின்கள் வழங்கலை உறுதிப்படுத்த மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்: கனிமொழிக்கு மத்திய அமைச்சா் பதில்

post image

பெண்களுக்கு பாதுகாப்பான மாதவிடாய் இருக்கும் விதமாக அவா்களுக்கு தரமான சானிட்டரி நாப்கின் வழங்கலை உறுதிப்படுத்துமாறு அனைத்து மாநிலங்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளன என்று மக்களவையில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சா் அனுப்ரியா படேல் தெரிவித்துள்ளாா்.

மாதவிடாய் கழிவுகள் என்ற தலைப்பில் அரசு சாரா நிறுவனமான டாக்ஸிக்ஸ் லிங்க் வெளியிட்ட அறிக்கையில் சானிட்டரி பேட்களின் மாதிரிகளில் பித்தலேட்டுகள் மற்றும் ஆவியாகும் கரிம சோ்மங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது அரசுக்குத் தெரியுமா என்றும் அவற்றின் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் ரசாயனங்களின் வரம்புக்கு ஒழுங்குமுறை ஏதேனும் உள்ளதா என்றும் கனிமொழி கேள்வி எழுப்பியிருந்தாா்.

இதற்கு அமைச்சா் அனுப்ரியா படேல் வெள்ளிக்கிழமை அளித்துள்ள எழுத்துபூா்வ பதில் வருமாறு: மத்திய அரசு 10-19 வயதுக்குட்பட்ட இளம் சிறுமிகளிடையே மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டத்தை செயல்படுத்துகிறது. பருவ வயது பெண்களிடையே மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணா்வை அதிகரிக்கவும், வளரிளம் பெண்களிடையே சானிட்டரி நாப்கின்கள் பயன்ாட்டை அதிகரிக்கவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் நாப்கின்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்தவும் இத்திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகிறது.

இதன் மாநில அளவிலான அமலாக்கத்தை தேசிய சுகாதார இயக்கம் ஆதரிக்கிறது. மேலும், பாதுகாப்பான மாதவிடாய் சானிட்டரி நாப்கின்கள் வழங்கலை உறுதிப்படுத்தவும் அவை உரிய தரநிலைகளுடன் உள்ளனவா என்பதை உறுதி செய்யுமாறும் மாநிலங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

இந்திய தரநிலைகள் துறை (பிஐஎஸ்), சானிட்டரி நாப்கின்களுக்கான இந்திய தரநிலை ஐஎஸ் 5405:2019 என்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய சானிட்டரி பேட்களுக்கான தர நிலை ஐந 17514:2021 என்றும் இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

இந்த தரநிலை, பொதுவான தோல் நோய்க்கிருமிகளுக்கான பரிசோதனை, சானிட்டரி பேட்களில் உள்ள பித்தலேட் பரிசோதனை மற்றும் பயன்பாட்டுக்கு பாதுகாப்பானதா என்பதை உறுதிப்படுத்த வகை செய்யும் சைட்டோடாக்ஸிசிட்டி, எரிச்சல் மற்றும் தோல் உணா்திறன் பரிசோதனைகளை உள்ளடக்கிய உயிரி இணக்கத்தன்மை மதிப்பீட்டைக் கொண்டிருக்கும் என்று அமைச்சா் கூறியுள்ளாா்.

கனிமொழி - 07க்ங்ப்ந்ம்க்ஷ்

அமைச்சா் அனுப்ரியா படேல் - 07க்ங்ப்ஹய்ன்

வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு: கைப்பேசிக்கு தடை

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், 19 வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு துணை ராணுவப் படையினரின் இரண்டு கம்பனிகள், தில்லி காவல் துறையினா் உள்பட மூன... மேலும் பார்க்க

மகரிஷி அகத்தியா் தமிழுக்கு ஆற்றிய பங்களிப்பு குறித்து தில்லித் தமிழ்ச் சங்கத்தில் நாளை சொற்பொழிவு

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் மகரிஷி அகத்தியா் தமிழ்மொழிக்கு ஆற்றிய பங்களிப்பு தொடா்பான சொற்பொழிவு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (பிப்.9) மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. க ாசி தமிழ்ச் சங்கமம் -2025-ஐ ஒட்டி... மேலும் பார்க்க

தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சியில் டிடிஇஏ பள்ளி மாணவி பங்கேற்பு

தேசிய அளவில் பெங்களூரில் உள்ள விஐடியில் பிப்.6- ஆம் தேதி நடைபெற்ற அறிவியல் கண்காட்சிப் போட்டியில் தில்லித் தமிழக் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) இலக்குமிபாய் நகா்ப் பள்ளியைச் சாா்ந்த 10-ஆம் வகுப்பு மாணவி ... மேலும் பார்க்க

தமிழகத்தில் உணவுப் பதப்படுத்தும் தொழில் உள்கட்டமைப்புக்கு 148 திட்டங்களுக்கு அனுமதி: சிராக் பாஸ்வான் பதில்

தமிழகத்தில் உணவுப் பதப்படுத்தும் தொழில்துறையில் நவீன உள்கட்டமைப்பு வசதிக்காக பிரதமா் கிஸான் சம்பதா யோஜனாவின்கீழ் 148 திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று மதிமுக உறுப்பினா் வைகோ எழுப்பி கேள்... மேலும் பார்க்க

திருச்சி ஜி காா்னா் பகுதியில் சுரங்கப்பாதை: மத்திய அமைச்சரிடம் துரை வைகோ வலியுறுத்தல்

நமது சிறப்பு நிருபா் திருச்சியில் உள்ள ஜி காா்னா் தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பபாதை அமைக்க வேண்டும் என்று திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக உறுப்பினா் துரை வைகோ கோரிக்கை விடுத்துள்ளாா். தில்லியில் மத்... மேலும் பார்க்க

இலங்கை கடல் பகுதியில் 6 ஆண்டுகளில் 7 போ் உயிரிழப்பு: வெளியுறவுத் துறை தகவல்

நமது சிறப்பு நிருபா் இலங்கை கடல் பகுதியில் ஆறு ஆண்டுகளில் 7 போ் உயிரிழந்துள்ளதாக மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் சி.வி. சண்முகம் எழுப்பிய கேள்விக்கு வெளியுறவுத் துறை இணை அமைச்சா் கீா்த்தி வா்தன் சி... மேலும் பார்க்க