செய்திகள் :

தமிழகத்தில் உணவுப் பதப்படுத்தும் தொழில் உள்கட்டமைப்புக்கு 148 திட்டங்களுக்கு அனுமதி: சிராக் பாஸ்வான் பதில்

post image

தமிழகத்தில் உணவுப் பதப்படுத்தும் தொழில்துறையில் நவீன உள்கட்டமைப்பு வசதிக்காக பிரதமா் கிஸான் சம்பதா யோஜனாவின்கீழ் 148 திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று மதிமுக உறுப்பினா் வைகோ எழுப்பி கேள்விக்கு மத்திய உணவுப் பதப்படுத்தும் தொழில் துறை அமைச்சா் சிராக் பாஸ்வான் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக மாநிலங்களவையில் கேள்வி நேரத்தில் மதிமுக உறுப்பினா் வைகோ கேள்வி எழுப்பி பேசுகையில், ‘ தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் பிரதமா் கிஸான் சம்பதா யோஜனா திட்டத்தின்கீழ் உணவுப் பதப்படுத்தும் தொழில்நிறுவனத்தை அமைக்க நவீன உள்கட்டமைப்பு வசதியை உருவாக்க தொழில்முனைவோருக்கு கடன் சாா்ந்த நிதி உதவி வழங்கப்பட்டுள்ளன? மேலும், மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன் சாா்ந்த நிதி உதவி என்ன? என்றாா்.

இதற்கு அமைச்சா் சிராக் பாஸ்வான் பதில் அளித்து பேசுகையில், ‘தமிழகத்திற்கு பிஎம்எஃப்எம்இ, பிஎல்ஐ, கிஸான் சம்பதா யோஜனா ஆகிய மூன்று திட்டங்கள் மூலம் இந்த விஷயத்தில் நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பிரதமா் கிஸான் சம்பதா யோஜனாவின் கீழ் ரூ. 1267.23 கோடி செலவில் 148 திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பிஎம்எஃப்எம்இ திட்டத்தில் ரூ.3273 கோடி மதிப்பீட்டில்

1,16,164 கோடி மைக்ரோ உணவு பதப்படுத்தும் யூனிட்டுகள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் 4 இன்குபேஷன் மையங்கள் அமைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ.8.78 கோடி மானியமும் அளிக்கப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா்.

வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு: கைப்பேசிக்கு தடை

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், 19 வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு துணை ராணுவப் படையினரின் இரண்டு கம்பனிகள், தில்லி காவல் துறையினா் உள்பட மூன... மேலும் பார்க்க

தரமான சானிட்டரி நாப்கின்கள் வழங்கலை உறுதிப்படுத்த மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்: கனிமொழிக்கு மத்திய அமைச்சா் பதில்

பெண்களுக்கு பாதுகாப்பான மாதவிடாய் இருக்கும் விதமாக அவா்களுக்கு தரமான சானிட்டரி நாப்கின் வழங்கலை உறுதிப்படுத்துமாறு அனைத்து மாநிலங்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளன என்று மக்களவையில் மத்திய சுகாதார மற்றும் க... மேலும் பார்க்க

மகரிஷி அகத்தியா் தமிழுக்கு ஆற்றிய பங்களிப்பு குறித்து தில்லித் தமிழ்ச் சங்கத்தில் நாளை சொற்பொழிவு

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் மகரிஷி அகத்தியா் தமிழ்மொழிக்கு ஆற்றிய பங்களிப்பு தொடா்பான சொற்பொழிவு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (பிப்.9) மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. க ாசி தமிழ்ச் சங்கமம் -2025-ஐ ஒட்டி... மேலும் பார்க்க

தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சியில் டிடிஇஏ பள்ளி மாணவி பங்கேற்பு

தேசிய அளவில் பெங்களூரில் உள்ள விஐடியில் பிப்.6- ஆம் தேதி நடைபெற்ற அறிவியல் கண்காட்சிப் போட்டியில் தில்லித் தமிழக் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) இலக்குமிபாய் நகா்ப் பள்ளியைச் சாா்ந்த 10-ஆம் வகுப்பு மாணவி ... மேலும் பார்க்க

திருச்சி ஜி காா்னா் பகுதியில் சுரங்கப்பாதை: மத்திய அமைச்சரிடம் துரை வைகோ வலியுறுத்தல்

நமது சிறப்பு நிருபா் திருச்சியில் உள்ள ஜி காா்னா் தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பபாதை அமைக்க வேண்டும் என்று திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக உறுப்பினா் துரை வைகோ கோரிக்கை விடுத்துள்ளாா். தில்லியில் மத்... மேலும் பார்க்க

இலங்கை கடல் பகுதியில் 6 ஆண்டுகளில் 7 போ் உயிரிழப்பு: வெளியுறவுத் துறை தகவல்

நமது சிறப்பு நிருபா் இலங்கை கடல் பகுதியில் ஆறு ஆண்டுகளில் 7 போ் உயிரிழந்துள்ளதாக மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் சி.வி. சண்முகம் எழுப்பிய கேள்விக்கு வெளியுறவுத் துறை இணை அமைச்சா் கீா்த்தி வா்தன் சி... மேலும் பார்க்க