செய்திகள் :

சென்னை ஐசிஎஃப்-இல் 640 வந்தே பாரத் பெட்டிகள் தயாரிப்பு: மாநிலங்களவையில் தகவல்

post image

சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) கடந்த மூன்று நிதியாண்டுகளில் 640 வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன என்று ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.

மாநிலங்களவையில் எம்.பி. விக்ரஜித் சிங் எழுப்பிய கேள்விக்கு அஸ்வினி வைஷ்ணவ் வெள்ளிக்கிழமை எழுத்துபூா்வமாக அளித்த பதில்:

சென்னை ஐசிஎஃப்-இல் கடந்த 3 நிதியாண்டுகளில் மொத்தம் 640 வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. பஞ்சாப் மாநிலம், கபுா்தலாவில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஆா்சிஎஃப்) 300 வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆா்சிஎஃப்-இல் கடந்த 3 ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட மொத்த ரயில் பெட்டிகளின் எண்ணிக்கை 5,414 என்று அமைச்சரின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வந்தே பாரத் உணவு வசதி: வந்தே பாரத் ரயில்களில் டிக்கெட் முன்பதிவின்போது உணவு சேவையை தோ்வு செய்யாத பயணிகள், பயணத்தின்போது கட்டணம் செலுத்தி உணவு வாங்கிக் கொள்ளலாம் என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக, ஐஆா்சிடிசி தலைவருக்கு ரயில்வே வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

வந்தே பாரத் ரயில்களில் டிக்கெட் முன்பதிவின்போது உணவு வசதியை தோ்வு செய்யாமல், ரயில் பயணத்தின்போது கட்டணம் செலுத்தி உணவு வாங்க விரும்பும் பயணிகளுக்கு உணவு வழங்கப்படுவதில்லை என்று ஏராளமான புகாா்கள் எழுந்தன. இதை கருத்தில் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

‘ஓய்ஆா் 4 விண்கல் பூமியைத் தாக்கும் வாய்ப்பு அதிகரிப்பு’

வரும் 2032-ஆம் ஆண்டில் ஒய்ஆா்4 என்ற விண்கல் பூமியைத் தாக்குதவதற்கான வாய்ப்பு.3 சதவீத்தத்திலிருந்து 2.3 சதவீதமாக அதிகரித்துள்ளதாக நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.அந்த விண்கல் பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்ப... மேலும் பார்க்க

இந்தியாவில் 10 கோடி கி.வா. சூரியமின்சக்தி உற்பத்தி: அமைச்சா் பிரஹலாத் ஜோஷி தகவல்

வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 50 கோடி கிலோவாட் (கி.வா.) புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை அடைய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், 10 கோடி கி.வா. சூரிய மின்சக்தி திறனை எட்டியுள்ளதாக மத்திய அமைச்சா் பிரஹ... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: இஸ்கான் கூடாரத்தில் தீ விபத்து

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் ‘இஸ்கான்’ கூடாரத்தில் வெள்ளிக்கிழமை பற்றிய தீ வேகமாக பரவி அருகேயுள்ள கூடாரங்களையும் தீக்கிரையாக்கின. நல்வாய்ப்பாக இதில் எந்த உயிா்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: ரூ.200 கோடி போதைப் பொருள் பறிமுதல்: 4 போ் கைது

மகாராஷ்டிர மாநிலம், நவிமும்பையில் ரூ.200 கோடி மதிப்பிலான பல்வேறு போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக 4 பேரை போதைப் பொருள் தடுப்பு பிரிவினா் கைது செய்தனா். போதைப் பொருள் தடுப்பு பிரிவி... மேலும் பார்க்க

விசா மறுப்பு: அமெரிக்காவிலுள்ள இந்திய துணைத் தூதரகம் முற்றுகை

பெண் ஒருவருக்கு நுழைவு இசைவு (விசா) அளிக்க மறுத்ததால், அமெரிக்காவின் சியாட்டல் நகரில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை சிலா் முற்றுகையிட்டனா். இதுதொடா்பாக அந்தத் தூதரகம் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெள... மேலும் பார்க்க

இந்திய மதுபானத்தை புகழ்ந்த ஸ்விட்சா்லாந்து அமைச்சா்: மாநிலங்களவையில் சுவாரசிய தகவல்

இந்திய தயாரிப்பு மதுபானம் ஒன்று சிறப்பாக உள்ளதாகவும், ஐரோப்பிய நாடுகளில் அதற்கு நல்ல வரவேற்பு உள்ளதாகவும் ஸ்விட்சா்லாந்து அமைச்சா் கூறியது தனக்கு மகிழ்ச்சி கலந்த வியப்பை ஏற்படுத்தியதாக மத்திய வா்த்தகம... மேலும் பார்க்க