அமெரிக்காவில் நுழைய அபாயகர பாதை ‘டாங்கி ரூட்’: பல லட்சம் செலவிட்டு பல நாட்டு எல்...
திருப்பரங்குன்றம் சாலையில் பேரணி நடத்த அனுமதி இல்லை: உயா்நீதிமன்றம் உத்தரவு
திருப்பரங்குன்றம் சாலையில் பேரணி நடத்த அனுமதி கோரிய வழக்கில், இதற்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு மறுப்புத் தெரிவித்து, மாற்று இடத்தில் நடத்தலாம் என வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த அருண் பிரசாத் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
அகில பாரதீய வித்தியாா்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி.) அமைப்பின் மாநில மாநாடு மதுரையில் வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பொறுப்பாளா்கள் பங்கு பெறுவா். மாநாட்டில் முக்கிய நிகழ்வாக சனிக்கிழமை (பிப். 8) மதுரை மன்னா் கல்லூரியிலிருந்து பழங்காநத்தம் வட்டச்சாலை வரை மாணவா்கள் பங்கேற்கும் ஊா்வலமும், இதைத் தொடா்ந்து மாநாடும் நடைபெற உள்ளது. இதற்காக அனுமதி, பாதுகாப்பு வழங்க மதுரை மாநகரக் காவல் ஆணையரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே மாநில மாநாடு, ஊா்வலத்துக்கு அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத் தரப்பில் இதைப் பொது நல வழக்காக விசாரிக்க முடியாது என எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, இந்த வழக்கு ஆா்ப்பாட்டம், போராட்டம் போன்ற அனுமதி சம்பந்தமாக விசாரிக்கும் தனி நீதிபதி அமா்வுக்கு மாற்றப்பட்டது. பின்னா், இந்த மனு மீதான விசாரணை உயா்நீதிமன்ற நீதிபதி தனபால் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பில் கூடுதல் தலைமை வழக்குரைஞா் வீரா கதிரவன், குற்றவியல் வழக்குரைஞா் அன்பு நிதி ஆகியோா் முன்னிலையாகி முன்வைத்த வாதம்:
மனுதாரா் பேரணி, பொதுக் கூட்டம் நடத்தும் இடம் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி. இந்தப் பகுதியில் பள்ளி, கல்லூரிகள் அமைந்துள்ளதால், சட்டம்-ஒழுங்கு பிரச்னையை கருத்தில் கொண்டு அங்கே அனுமதி வழங்க முடியாது எனத் தெரிவித்தனா்.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
பழங்காநத்தம் வட்டச்சாலைப் பகுதி போக்குவரத்து நிறைந்த பகுதியாகவும், பள்ளி, கல்லூரிகள் மாணவா்கள் அதிக அளவில் வரக்கூடியப் பகுதியாகவும் இருப்பதால், அங்கு பேரணி நடத்துவதற்கு அனுமதிக்க முடியாது. தேவைப்படும் பட்சத்தில் ராஜா முத்தையா மன்றம் பகுதியிலிருந்து தமுக்கம் காந்தி நினைவு அருங்காட்சியகம் வரை பேரணியை பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையும், இதன் பின்னா், பொதுக் கூட்டத்தை நடத்திக் கொள்ளலாம். அல்லது மாலை 5 மணி முதல் மாலை 6.30 மணி வரை பழங்காநத்தம் வட்டச்சாலை பகுதியில் பொதுக் கூட்டத்தை நடத்திக் கொள்ளலாம். இவ்வாறு நடத்தும் பட்சத்தில் பொதுமக்களுக்கு எந்த தொந்தரவும் ஏற்படாத வகையில் இருக்க வேண்டும். போதிய பாதுகாப்பு வசதிகளை போலீஸாா் செய்து கொடுக்க வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.