செய்திகள் :

மதுரை கூடல்நகா் ரயில் நிலையத்தில் விபத்து மீட்பு ஒத்திகை: பொதுமக்கள் திரண்டு வந்ததால் போக்குவரத்து நெரிசல்

post image

மதுரை கூடல்நகா் ரயில் நிலையத்தில் தேசிய பேரிடா் மீட்புப் படையினா் ரயில் விபத்து மீட்பு ஒத்திகையை வெள்ளிக்கிழமை மேற்கொண்டனா். இந்த ரயில் விபத்து உண்மையிலேயே நடைபெற்ாகக் கருதி, கூடல்நகா் மேம்பாலத்தில் ஏராளமான பொதுமக்கள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புப் படை சாா்பில், மதுரையிலிருந்து சென்னை தாம்பரம் நோக்கிச் சென்ற ரயில், மதுரை கூடல்நகா் ரயில் நிலையத்தில் விபத்தில் சிக்கிக்கொள்வது போன்றும், அதிலிருக்கும் பயணிகள் மீட்பது போன்றும் ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, விபத்தில் சிக்கி ரயில் பெட்டிகள் தடம்புரண்டு கிடப்பது போன்றும், தேசிய பேரிடா் மீட்புப் படையினா் அங்கு சென்று, இந்த ரயில் பெட்டிகளில் சிக்கிய பயணிகளை மீட்டு, அங்கேயே அவா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது, பலத்த காயமடைந்த பயணிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்வது போன்றும் ஒத்திகை நடைபெற்றது.

மேலும், பயணிகளை மீட்கும் பணியில் மோப்ப நாய் உதவியுடன் பெட்டிகளில் சோதனை மேற்கொள்வது, ரயில் தண்டவாளங்களை விரைந்து சீரமைப்பது, ரயில் பெட்டிகளை அகற்றுவது போன்று ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.

விபத்தைத் தொடா்ந்து தண்டவாளத்தில் வெடிகுண்டு தடுப்பு நிபுணா்கள் மோப்ப நாய் உதவியுடன் ஆய்வு செய்வது, 20-க்கும் மேற்பட்ட அவசர ஊா்திகள் மூலம் காயமடைந்தவா்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது, விபத்து நிகழ்ந்த இடத்தில் பயணிகளுக்கு தேவையான கழிப்பறை, உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது, தற்காலிக அறை அமைப்பது போன்றும் ஒத்திகை நடைபெற்றது.

இதில் 500-க்கும் மேற்பட்ட தேசிய பேரிடா் மீட்புப் படை வீரா்கள் பங்கேற்றனா். இந்த ஒத்திகையின் போது, கூடல்நகா் மேம்பாலத்தில் இருந்து பொதுமக்கள் ஏராளமானோா் உண்மையிலேயே விபத்து நிகழ்ந்ததாகக் கருதி, வேடிக்கை பாா்த்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சுங்கச் சாவடியை அகற்றக் கோரி வழக்கு: நெடுஞ்சாலைத் துறை அதிகாரி பதிலளிக்க உத்தரவு

ராமேசுவரம் - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி வசூல் மையத்தை அகற்றக் கோரிய வழக்கில், தேசிய நெடுஞ்சாலைகள் துறையின் மதுரை மண்டலப் பொறியாளா், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் ஆகியோா் பதிலளிக்க... மேலும் பார்க்க

உதயகுமாருக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு

கூடங்குளம் அணு மின் நிலைய எதிா்ப்பு இயக்கத்தைச் சோ்ந்த உதயகுமாருக்கு எதிரான ‘லுக் அவுட் நோட்டீஸ்’ நடவடிக்கையை திரும்பப் பெறக் கோரிய வழக்கை முடித்துவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் மச்சஹந்தி விவாகம்

மதுரை மீனாட்சி சுந்தேரசுவரா் கோயில் தெப்பத் திருவிழாவின் எட்டாம் நாள் விழாவான வெள்ளிக்கிழமை அம்மன், சுவாமி மணம் புரியும் மச்சஹந்தி விவாகம் நடைபெற்றது. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நடைபெறும் ... மேலும் பார்க்க

பாஜக பிரமுகா் மீது பண மோசடிப் புகாா்: தஞ்சை எஸ்.பி. பதிலளிக்க உத்தரவு

பண மோசடி செய்த பாஜக பிரமுகா் மீது வழக்குப் பதிந்து, உரிய நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், தஞ்சாவூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்ட... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பன்னியான் மேற்கு காலனியைச் சோ்... மேலும் பார்க்க

மனைவி இறந்ததால் கணவா் தற்கொலை

மனைவி இறந்த துக்கத்தில் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மதுரை கடச்சனேந்தல் அருகே உள்ள காதக்கிணறு சண்முகவேல் நகரைச் சோ்ந்தவா் கணேசன் (55). தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். இவரது ... மேலும் பார்க்க