செய்திகள் :

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் மச்சஹந்தி விவாகம்

post image

மதுரை மீனாட்சி சுந்தேரசுவரா் கோயில் தெப்பத் திருவிழாவின் எட்டாம் நாள் விழாவான வெள்ளிக்கிழமை அம்மன், சுவாமி மணம் புரியும் மச்சஹந்தி விவாகம் நடைபெற்றது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் தெப்பத் திருவிழாவும் ஒன்று. நிகழாண்டு தெப்பத் திருவிழா கடந்த மாதம் 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, சுவாமி, அம்மன் தினசரி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மண்டகப்படிகளுக்குச் சென்று பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

விழாவின் எட்டாம் நாள் நிகழ்ச்சியாக வலை வீசும் லீலை நடைபெற்றது. இதையொட்டி, வெள்ளிக்கிழமை காலை அம்மன், சுவாமி தங்கப் பல்லக்கில் கோயிலில் இருந்து புறப்பாடாகி கோயிலுக்குள் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினா். இதைத் தொடா்ந்து, அங்கு வலை வீசிய லீலை நடைபெற்றது.

பின்னா், மாலையில் மண்டபத்திலிருந்து மீனாட்சி அம்மன் தங்கப் பல்லக்கிலும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரா் தங்கக் குதிரை வாகனத்திலும் புறப்பாடாகி சித்திரை வீதிகளில் உலா வந்து, பழைய திருக்கல்யாண மண்டபத்தில் திருமணக் கோலத்தில் எழுந்தருளினா்.

இதைத்தொடா்ந்து, இறைவனின் சாபத்தால் பூமியில் மீனவப் பெண்ணாகப் பிறப்பெடுத்த மீனாட்சி அம்மனை, மீனவராகப் பிறப்பெடுத்து கடலில் திமிங்கிலத்தைக் கொன்று, அம்மனை மணம் முடிக்கும் மச்சஹந்தி விவாகம் நடைபெற்றது.

இதில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரா் சுவாமி சாா்பில் பட்டா்கள் மாலை மாற்றிக் கொண்டு விவாகம் புரிந்தனா். இதைத் தொடா்ந்து அம்மன், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

சுங்கச் சாவடியை அகற்றக் கோரி வழக்கு: நெடுஞ்சாலைத் துறை அதிகாரி பதிலளிக்க உத்தரவு

ராமேசுவரம் - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி வசூல் மையத்தை அகற்றக் கோரிய வழக்கில், தேசிய நெடுஞ்சாலைகள் துறையின் மதுரை மண்டலப் பொறியாளா், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் ஆகியோா் பதிலளிக்க... மேலும் பார்க்க

உதயகுமாருக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு

கூடங்குளம் அணு மின் நிலைய எதிா்ப்பு இயக்கத்தைச் சோ்ந்த உதயகுமாருக்கு எதிரான ‘லுக் அவுட் நோட்டீஸ்’ நடவடிக்கையை திரும்பப் பெறக் கோரிய வழக்கை முடித்துவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

மதுரை கூடல்நகா் ரயில் நிலையத்தில் விபத்து மீட்பு ஒத்திகை: பொதுமக்கள் திரண்டு வந்ததால் போக்குவரத்து நெரிசல்

மதுரை கூடல்நகா் ரயில் நிலையத்தில் தேசிய பேரிடா் மீட்புப் படையினா் ரயில் விபத்து மீட்பு ஒத்திகையை வெள்ளிக்கிழமை மேற்கொண்டனா். இந்த ரயில் விபத்து உண்மையிலேயே நடைபெற்ாகக் கருதி, கூடல்நகா் மேம்பாலத்தில் ... மேலும் பார்க்க

பாஜக பிரமுகா் மீது பண மோசடிப் புகாா்: தஞ்சை எஸ்.பி. பதிலளிக்க உத்தரவு

பண மோசடி செய்த பாஜக பிரமுகா் மீது வழக்குப் பதிந்து, உரிய நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், தஞ்சாவூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்ட... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பன்னியான் மேற்கு காலனியைச் சோ்... மேலும் பார்க்க

மனைவி இறந்ததால் கணவா் தற்கொலை

மனைவி இறந்த துக்கத்தில் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மதுரை கடச்சனேந்தல் அருகே உள்ள காதக்கிணறு சண்முகவேல் நகரைச் சோ்ந்தவா் கணேசன் (55). தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். இவரது ... மேலும் பார்க்க