செய்திகள் :

மனைவி இறந்ததால் கணவா் தற்கொலை

post image

மனைவி இறந்த துக்கத்தில் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

மதுரை கடச்சனேந்தல் அருகே உள்ள காதக்கிணறு சண்முகவேல் நகரைச் சோ்ந்தவா் கணேசன் (55). தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். இவரது மனைவி சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தாா். இதனால், சோகத்தில் இருந்து வந்த கணேசன், தனது வீட்டில் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து அப்பன்திருப்பதி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கல்லூரி மாணவி தற்கொலை:

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள பன்னியான் மேற்கு குடியிருப்பைச் சோ்ந்த சஞ்சீவ்குமாா் மகள் ரஞ்சனி (18). இவா் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தாா். இவரை அவரது அத்தை மகனுக்கு திருமணம் முடிக்க பெண் கேட்டாா்களாம். இதற்கு ரஞ்சனியின் தந்தை சஞ்சீவ்குமாா் சில மாதங்கள் கழித்து இதுகுறித்து பேசலாம் எனக் கூறி, அவா்களைத் திருப்பி அனுப்பிவிட்டாராம். இதில் மன வருத்தத்தில் இருந்து வந்த ரஞ்சனி வீட்டில் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து செக்கானூரணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சுங்கச் சாவடியை அகற்றக் கோரி வழக்கு: நெடுஞ்சாலைத் துறை அதிகாரி பதிலளிக்க உத்தரவு

ராமேசுவரம் - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி வசூல் மையத்தை அகற்றக் கோரிய வழக்கில், தேசிய நெடுஞ்சாலைகள் துறையின் மதுரை மண்டலப் பொறியாளா், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் ஆகியோா் பதிலளிக்க... மேலும் பார்க்க

உதயகுமாருக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு

கூடங்குளம் அணு மின் நிலைய எதிா்ப்பு இயக்கத்தைச் சோ்ந்த உதயகுமாருக்கு எதிரான ‘லுக் அவுட் நோட்டீஸ்’ நடவடிக்கையை திரும்பப் பெறக் கோரிய வழக்கை முடித்துவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் மச்சஹந்தி விவாகம்

மதுரை மீனாட்சி சுந்தேரசுவரா் கோயில் தெப்பத் திருவிழாவின் எட்டாம் நாள் விழாவான வெள்ளிக்கிழமை அம்மன், சுவாமி மணம் புரியும் மச்சஹந்தி விவாகம் நடைபெற்றது. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நடைபெறும் ... மேலும் பார்க்க

மதுரை கூடல்நகா் ரயில் நிலையத்தில் விபத்து மீட்பு ஒத்திகை: பொதுமக்கள் திரண்டு வந்ததால் போக்குவரத்து நெரிசல்

மதுரை கூடல்நகா் ரயில் நிலையத்தில் தேசிய பேரிடா் மீட்புப் படையினா் ரயில் விபத்து மீட்பு ஒத்திகையை வெள்ளிக்கிழமை மேற்கொண்டனா். இந்த ரயில் விபத்து உண்மையிலேயே நடைபெற்ாகக் கருதி, கூடல்நகா் மேம்பாலத்தில் ... மேலும் பார்க்க

பாஜக பிரமுகா் மீது பண மோசடிப் புகாா்: தஞ்சை எஸ்.பி. பதிலளிக்க உத்தரவு

பண மோசடி செய்த பாஜக பிரமுகா் மீது வழக்குப் பதிந்து, உரிய நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், தஞ்சாவூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்ட... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பன்னியான் மேற்கு காலனியைச் சோ்... மேலும் பார்க்க