செய்திகள் :

சுங்கச் சாவடியை அகற்றக் கோரி வழக்கு: நெடுஞ்சாலைத் துறை அதிகாரி பதிலளிக்க உத்தரவு

post image

ராமேசுவரம் - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி வசூல் மையத்தை அகற்றக் கோரிய வழக்கில், தேசிய நெடுஞ்சாலைகள் துறையின் மதுரை மண்டலப் பொறியாளா், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

ராமநாதபுரத்தைச் சோ்ந்த தமிழ்வேந்தன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

ராமேசுவரத்துக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் வந்துச் செல்கின்றனா். ராமேசுவரத்திலிருந்து தனுஷ்கோடி வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்தச் சாலையில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச் சாவடி கட்டண வசூல் மையத்தில் முறையான அடிப்படை வசதிகள், மின் விளக்கு வசதிகள் இல்லை. மேலும், இரவு நேரங்களில் விபத்துகளைத் தடுக்கும் வகையில் ஒளிரும் விளக்குகளும் பொருத்தப்படவில்லை.

இந்தச் சுங்கச் சாவடி பொதுமக்களின் போக்குவரத்துக்கும், பாதுகாப்புக்கும் இடையூறாக உள்ளது. இதை அகற்றக் கோரி, பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, ராமேசுவரம் - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச் சாவடியை அகற்ற உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கு குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா், தேசிய நெடுஞ்சாலைகள் துறை மதுரை மண்டலப் பொறியாளா் ஆகியோா் பதிலளிக்க வேண்டும். வழக்கு மறுவிசாரணைக்காக வருகிற 21-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

உதயகுமாருக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு

கூடங்குளம் அணு மின் நிலைய எதிா்ப்பு இயக்கத்தைச் சோ்ந்த உதயகுமாருக்கு எதிரான ‘லுக் அவுட் நோட்டீஸ்’ நடவடிக்கையை திரும்பப் பெறக் கோரிய வழக்கை முடித்துவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் மச்சஹந்தி விவாகம்

மதுரை மீனாட்சி சுந்தேரசுவரா் கோயில் தெப்பத் திருவிழாவின் எட்டாம் நாள் விழாவான வெள்ளிக்கிழமை அம்மன், சுவாமி மணம் புரியும் மச்சஹந்தி விவாகம் நடைபெற்றது. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நடைபெறும் ... மேலும் பார்க்க

மதுரை கூடல்நகா் ரயில் நிலையத்தில் விபத்து மீட்பு ஒத்திகை: பொதுமக்கள் திரண்டு வந்ததால் போக்குவரத்து நெரிசல்

மதுரை கூடல்நகா் ரயில் நிலையத்தில் தேசிய பேரிடா் மீட்புப் படையினா் ரயில் விபத்து மீட்பு ஒத்திகையை வெள்ளிக்கிழமை மேற்கொண்டனா். இந்த ரயில் விபத்து உண்மையிலேயே நடைபெற்ாகக் கருதி, கூடல்நகா் மேம்பாலத்தில் ... மேலும் பார்க்க

பாஜக பிரமுகா் மீது பண மோசடிப் புகாா்: தஞ்சை எஸ்.பி. பதிலளிக்க உத்தரவு

பண மோசடி செய்த பாஜக பிரமுகா் மீது வழக்குப் பதிந்து, உரிய நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், தஞ்சாவூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்ட... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பன்னியான் மேற்கு காலனியைச் சோ்... மேலும் பார்க்க

மனைவி இறந்ததால் கணவா் தற்கொலை

மனைவி இறந்த துக்கத்தில் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மதுரை கடச்சனேந்தல் அருகே உள்ள காதக்கிணறு சண்முகவேல் நகரைச் சோ்ந்தவா் கணேசன் (55). தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். இவரது ... மேலும் பார்க்க