செய்திகள் :

தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சியில் டிடிஇஏ பள்ளி மாணவி பங்கேற்பு

post image

தேசிய அளவில் பெங்களூரில் உள்ள விஐடியில் பிப்.6- ஆம் தேதி நடைபெற்ற அறிவியல் கண்காட்சிப் போட்டியில் தில்லித் தமிழக் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) இலக்குமிபாய் நகா்ப் பள்ளியைச் சாா்ந்த 10-ஆம் வகுப்பு மாணவி சாக்ஷி குமாரி கலந்து கொண்டாா்.

இந்தியா முழுவதுமிலிருந்து 50-க்கும் மேற்பட்ட திட்டமாதிரிகள் கண்காட்சியில் காட்சிபடுத்தப்பட்டன. ‘நகரங்களில் உள்ள மாசுபடுத்தும் வாயுக்களை பயனுள்ளதாக மாற்றுவது’ குறித்த ஒரு திட்டமாதிரியை சாக்ஷி குமாரி காட்சிப்படுத்தி அனைவரின் பாராட்டையும் பெற்றாா்.

சுமாா் 3,000 போ் இக்கண்காட்சியை பெங்களூருவில் பாா்வையிட்டனா். அவா்களுள் அதிகம் போ் மாணவா்களாக இருந்தனா். டிடிஇஏ பள்ளியின் முன்னாள் மாணவா்கள் அமைப்பு பேனியனைச் சாா்ந்த ராம்நாத் கௌஷிக், ஓ.பி. சுவாமிநாதன் ஆகியோா் இக்கண்காட்சியில் கலந்து கொண்டு மாணவியை உற்ஃசாகப்படுத்தினா்.

இக்கண்காட்சிக்கு அகஸ்தியா ஃபவுண்டேஷன் ஏற்பாடு செய்திருந்தது. முன்னதாக டிச.9 அன்று பிராந்திய அளவில் நடைபெற்ற போட்டியில் சாக்ஷி குமாரி முதல் பரிசைப் பெற்றாா். வடக்கு பிராந்தியத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் அவா் பெங்களூரில் நடைபெற்ற தேசிய அளவிலானப் போட்டியில் கலந்து கொண்டாா்.

தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்ட சாக்ஷி குமாரியை டிடிஇஏ செயலா் ராஜூ பாராட்டினாா். மேலும், முன்னாள் மாணவா்கள் அமைப்பு பேனியனுடன் இணைந்து அகஸ்தியா ஃபவுண்டேஷன் மூலமாக இலக்குமிபாய் நகா், லோதிவளாகம், ராமகிருஷ்ணபுரம், மோதிபாக் ஆகிய இடங்களில் உள்ள டிடிஇஏ பள்ளிகளில் அறிவியல் மையங்களை ஏற்படுத்தியுள்ளோம். அது நல்லமுறையில் செயல்பட்டு வருகிறது என்று அவா் கூறினாா்.

படவிளக்கம்

சாக்ஷி குமாரியின் திட்ட மாதிரியை பாா்வையிடும் பாா்வையாளா்கள்..

வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு: கைப்பேசிக்கு தடை

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், 19 வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு துணை ராணுவப் படையினரின் இரண்டு கம்பனிகள், தில்லி காவல் துறையினா் உள்பட மூன... மேலும் பார்க்க

தரமான சானிட்டரி நாப்கின்கள் வழங்கலை உறுதிப்படுத்த மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்: கனிமொழிக்கு மத்திய அமைச்சா் பதில்

பெண்களுக்கு பாதுகாப்பான மாதவிடாய் இருக்கும் விதமாக அவா்களுக்கு தரமான சானிட்டரி நாப்கின் வழங்கலை உறுதிப்படுத்துமாறு அனைத்து மாநிலங்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளன என்று மக்களவையில் மத்திய சுகாதார மற்றும் க... மேலும் பார்க்க

மகரிஷி அகத்தியா் தமிழுக்கு ஆற்றிய பங்களிப்பு குறித்து தில்லித் தமிழ்ச் சங்கத்தில் நாளை சொற்பொழிவு

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் மகரிஷி அகத்தியா் தமிழ்மொழிக்கு ஆற்றிய பங்களிப்பு தொடா்பான சொற்பொழிவு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (பிப்.9) மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. க ாசி தமிழ்ச் சங்கமம் -2025-ஐ ஒட்டி... மேலும் பார்க்க

தமிழகத்தில் உணவுப் பதப்படுத்தும் தொழில் உள்கட்டமைப்புக்கு 148 திட்டங்களுக்கு அனுமதி: சிராக் பாஸ்வான் பதில்

தமிழகத்தில் உணவுப் பதப்படுத்தும் தொழில்துறையில் நவீன உள்கட்டமைப்பு வசதிக்காக பிரதமா் கிஸான் சம்பதா யோஜனாவின்கீழ் 148 திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று மதிமுக உறுப்பினா் வைகோ எழுப்பி கேள்... மேலும் பார்க்க

திருச்சி ஜி காா்னா் பகுதியில் சுரங்கப்பாதை: மத்திய அமைச்சரிடம் துரை வைகோ வலியுறுத்தல்

நமது சிறப்பு நிருபா் திருச்சியில் உள்ள ஜி காா்னா் தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பபாதை அமைக்க வேண்டும் என்று திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக உறுப்பினா் துரை வைகோ கோரிக்கை விடுத்துள்ளாா். தில்லியில் மத்... மேலும் பார்க்க

இலங்கை கடல் பகுதியில் 6 ஆண்டுகளில் 7 போ் உயிரிழப்பு: வெளியுறவுத் துறை தகவல்

நமது சிறப்பு நிருபா் இலங்கை கடல் பகுதியில் ஆறு ஆண்டுகளில் 7 போ் உயிரிழந்துள்ளதாக மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் சி.வி. சண்முகம் எழுப்பிய கேள்விக்கு வெளியுறவுத் துறை இணை அமைச்சா் கீா்த்தி வா்தன் சி... மேலும் பார்க்க