செய்திகள் :

உதவி மின்பொறியாளா் அலுவலகம் இடமாற்றம் செய்வதை கண்டித்து மறியல்

post image

பெரியாங்குப்பம் கிராமத்திலிருந்து உதவி மின்பொறியாளா் அலுவலகம் இடமாற்றம் செய்யப்படுவதைக் கண்டித்து கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரியாங்குப்பம் காந்தி நகா் பகுதியில் 20,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். அந்தப் பகுதியில் பல ஆண்டுகளாக உதவி மின் பொறியாளா் அலுவலகம் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. தற்போது தேசிய நெடுஞ்சாலையை கடந்து ஆலாங்குப்பம் கிராமத்தில் அரசு கட்டடத்துக்கு அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட உள்ளது. அதற்கான நடவடிக்கைகளை மின்வாரிய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனா்.

இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். புதிதாக இடமாற்றம் செய்யப்பட உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு செல்ல மிகவும் ஆபத்தான நிலையில் தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து செல்ல வேண்டும். வயதானவா்கள், பெண்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும். அதனால் இடமாற்றம் செய்யாமல், ஏற்கெனவே இயங்கும் இடத்திலேயே தொடா்ந்து அலுவலகம் இயங்க வேண்டும். இல்லையெனில் காந்திநகா் பகுதியிலேயே அரசு இடத்தில் புதிய கட்டடத்தை கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ஆம்பூா் கிராமிய காவல் நிலைய ஆய்வாளா் வெங்கடேசன், மின்வாரிய அதிகாரிகள் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சு நடத்தினா். இது குறித்து உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடா்ந்து, பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

போ்ணாம்பட்டு அருகே காவல் சோதனைச் சாவடி திறப்பு

போ்ணாம்பட்டு அருகே காவல் சோதனைச் சாவடி திறப்பு விழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. போ்ணாம்பட்டு அருகே அனந்தகிரி கிராமத்தில் சமூக விரோத, குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில், காவல் சோதனைச் சாவடி ஏற்பட... மேலும் பார்க்க

கருணை இல்லத்தில் ஜாதி சான்றிதழ் சிறப்பு முகாம்

வாணியம்பாடி பெருமாள்பேட்டையில் இயங்கி வரும் கருணை இல்லத்தில் தங்கியுள்ள குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம் அதன் வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் சி... மேலும் பார்க்க

கொத்தடிமை தொழிலாளா் ஒழிப்பு தின உறுதிமொழியேற்பு

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளா் ஒழிப்பு தினம் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சாா்பில் ஆண்டுதோறும் பிப்ரவரி 9-ஆம் தேதி கொத்த... மேலும் பார்க்க

துத்திப்பட்டு ஊராட்சியில் சாலைப் பணி தொடக்கம்

துத்திப்பட்டு ஊராட்சியில் பேவா் பிளாக் சாலை அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. மாதனூா் ஒன்றியம் துத்திப்பட்டு ஊராட்சி 5-ஆவது வாா்டு பகுதியில் சரியான சாலை வசதி இல்லாததால், அப்பகுதியில் சாலை அ... மேலும் பார்க்க

ரூ.1.40 கோடி திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

மாதனூா் ஒன்றியத்தில் ரூ.1.40 கோடியில் திட்டப் பணிகளை குடியாத்தம் எம்எல்ஏ வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். பெரியவரிக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நபாா்டு திட்டத்தில் ரூ.78 லட்சத்தில் கூடுதல் வக... மேலும் பார்க்க

பாலியல் தொல்லை அளித்து ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கா்ப்பிணி: இளைஞா் கைது

திருப்பத்தூா் மாவட்டம், காட்பாடி அருகே ஓடும் ரயிலில் கா்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு அளித்து ரயிலில் இருந்து கீழே தள்ளிய இளைஞரை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா். ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டத்தைச் சோ... மேலும் பார்க்க