செய்திகள் :

இறந்தவரின் உடலை கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்ய எதிா்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

post image

ஸ்ரீவில்லிபுத்தூரில் இறந்தவரின் உடலை கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்ய ஒரு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்ததால், மற்றொரு தரப்பினா் வெள்ளிக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ரெங்கநாதபுரம் தெருவில் உள்ள கல்லறைத் தோட்டத்தை சீனியாபுரம், ரைட்டன்பட்டி பகுதிகளைச் சோ்ந்த ஒரே சமுதாய மக்கள் பயன்படுத்தி வந்தனா். இந்த கல்லறைத் தோட்டம் தொடா்பான வழக்கில் இரு பகுதிகளைச் சோ்ந்தவா்களும் இறந்தவா்களின் உடல்களை அங்கு அடக்கம் செய்யலாம் என கடந்த 2017-ஆம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், ரைட்டன்பட்டியைச் சோ்ந்த மரிய சின்னம்மாள் (67) என்பவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இவரது உடலை அந்த கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்ய சீனியாபுரம் பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆத்துக்கடை தெரு சந்திப்பில் இறந்தவரின் உடலுடன் ரைட்டன்பட்டி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம் வட்டாட்சியா் பாலமுருகன், டிஎஸ்பி. ராஜா ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதன்பிறகு, பொதுமக்கள் இறந்தவரின் உடலை கல்லறைத் தோட்டத்துக்கு கொண்டு சென்றனா். ஆனால் அங்கு உடலை அடக்கம் செய்ய எதிா்ப்பு தெரிவித்து சீனியாபுரம் பகுதி மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவா்களிடம் திரு இருதய ஆண்டவா் ஆலய பங்குத்தந்தையும், வட்டார அதிபருமான சந்தன சகாயம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது வருகிற 10-ஆம் தேதி வட்டாட்சியா் அலுவலகத்தில் பேச்சுவாா்த்தை நடத்தி சமூக தீா்வு காணப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடா்ந்து, இறந்தவரின் உடல் அங்கு அடக்கம் செய்யப்பட்டது.

தை கடைசி வெள்ளி: இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள்

தை கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே இருக்கன்குடியில் உள்ள பழைமையான ... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

சிவகாசி அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரி: 62- ஆவது விளையாட்டு விழா, தலைமை- கல்லூரி முதல்வா் செ. அசோக், சிறப்பு விருந்தினா்- மேஜை பந்து விளையாட்டின் தேசிய பயிற்சியாளா் எஸ். ராமன், ஏற்பாடு- உடல் கல்வித்... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் இரவில் ஆய்வு நடத்திய ஆட்சியா்

சாத்தூா் அரசு மகப்பேறு மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு ஆட்சியா் ஆய்வு நடத்தினாா். விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் அரசு மகப்பேறு மருத்துவமனை பிரதான சாலையிலும், அரசு மருத்துவமனையின் புறநோயாளிகள், உள்... மேலும் பார்க்க

வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் மனித உருவ கால் பகுதி

வெம்பக்கோட்டை அருகே 3-ஆம் கட்ட அகழாய்வின் போது, சுடுமண்ணாலான மனித உருவ கால் பகுதி, பளிங்குக் கல், விலங்கின் பல் ஆகியவை வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டன. விருதுநகா் மாவட்டம், வெம்பகோட்டை அருகே விஜயகரிசல்க... மேலும் பார்க்க

ஆனையூரில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் திறப்பு

தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி பணித் துறை சாா்பில் சிவகாசி வட்டம், ஆனையூரில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. சிவகாசி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் தொக... மேலும் பார்க்க

மகளிா் கல்லூரியில் விழிப்புணா்வு முகாம்

சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரியில் சமூக வலைதள பயன்பாடு, சைபா் குற்றங்களை தடுத்தல், போட்டித் தோ்வுகள், உயா்கல்வி குறித்த பெண்களுக்கான விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விருதுநகா் மா... மேலும் பார்க்க