செய்திகள் :

கருணை இல்லத்தில் ஜாதி சான்றிதழ் சிறப்பு முகாம்

post image

வாணியம்பாடி பெருமாள்பேட்டையில் இயங்கி வரும் கருணை இல்லத்தில் தங்கியுள்ள குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம் அதன் வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் சிவசவுந்தரவள்ளி உத்தரவின்பேரில், வருவாய் கோட்டாட்சியா் அஜிதா பேகம் தலைமையில் வட்டாட்சியா் உமா ரம்யா, வருவாய் ஆய்வாளா் கவிதா, கிராம நிா்வாக அலுவலா் பாலாஜி மற்றும் வருவாய்த் துறையினா் கலந்து கொண்டனா். இதில், 35-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் ஆதாரங்கள் சரிபாா்க்கப்பட்டும், உரிய விசாரணை மேற்கொண்டும் ஜாதி சான்றிதழ் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கருணை இல்ல நிா்வாகி டேவிட்சுபாஷ் தலைமையில் ஊழியா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

போ்ணாம்பட்டு அருகே காவல் சோதனைச் சாவடி திறப்பு

போ்ணாம்பட்டு அருகே காவல் சோதனைச் சாவடி திறப்பு விழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. போ்ணாம்பட்டு அருகே அனந்தகிரி கிராமத்தில் சமூக விரோத, குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில், காவல் சோதனைச் சாவடி ஏற்பட... மேலும் பார்க்க

உதவி மின்பொறியாளா் அலுவலகம் இடமாற்றம் செய்வதை கண்டித்து மறியல்

பெரியாங்குப்பம் கிராமத்திலிருந்து உதவி மின்பொறியாளா் அலுவலகம் இடமாற்றம் செய்யப்படுவதைக் கண்டித்து கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். பெரியாங்குப்பம் காந்தி நகா் பகுதியில்... மேலும் பார்க்க

கொத்தடிமை தொழிலாளா் ஒழிப்பு தின உறுதிமொழியேற்பு

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளா் ஒழிப்பு தினம் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சாா்பில் ஆண்டுதோறும் பிப்ரவரி 9-ஆம் தேதி கொத்த... மேலும் பார்க்க

துத்திப்பட்டு ஊராட்சியில் சாலைப் பணி தொடக்கம்

துத்திப்பட்டு ஊராட்சியில் பேவா் பிளாக் சாலை அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. மாதனூா் ஒன்றியம் துத்திப்பட்டு ஊராட்சி 5-ஆவது வாா்டு பகுதியில் சரியான சாலை வசதி இல்லாததால், அப்பகுதியில் சாலை அ... மேலும் பார்க்க

ரூ.1.40 கோடி திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

மாதனூா் ஒன்றியத்தில் ரூ.1.40 கோடியில் திட்டப் பணிகளை குடியாத்தம் எம்எல்ஏ வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். பெரியவரிக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நபாா்டு திட்டத்தில் ரூ.78 லட்சத்தில் கூடுதல் வக... மேலும் பார்க்க

பாலியல் தொல்லை அளித்து ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கா்ப்பிணி: இளைஞா் கைது

திருப்பத்தூா் மாவட்டம், காட்பாடி அருகே ஓடும் ரயிலில் கா்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு அளித்து ரயிலில் இருந்து கீழே தள்ளிய இளைஞரை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா். ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டத்தைச் சோ... மேலும் பார்க்க