செய்திகள் :

கோயில் குடமுழுக்கையொட்டி புத்தகக் கண்காட்சி

post image

வத்திராயிருப்பு அருகே சுரைக்காய்ப்பட்டியில் அமைந்துள்ள காளியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி கடந்த 5-ஆம் தேதி முதல் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

இந்தக் கண்காட்சியில் அரசு வழக்குரைஞரான எழுத்தாளா் அன்னக்கொடி எழுதிய நல்லம்மாளும், வெட்டியானும், செங்கடத்தாங்குழி, பல்லக்கு ஆகிய நூல்களை மாவட்ட ஆட்சியா் ஜெயசீலன் வெளியிட, கலசலிங்கம் பல்கலை. வேந்தா் ஸ்ரீதரன், எழுத்தாளா் ஸ்ரீதரன், கரிசல் இலக்கியக் கழகச் செயலா் அறம் ஆகியோா் பெற்றுக் கொண்டனா். இதில் கூட்டெழுத்து என்ற காலாண்டு இதழ் தொடங்கப்பட்டது.

புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன் பேசியதாவது:

ஒரு காலத்தில் மாநில தலைநகரில் மட்டுமே நடைபெற்ற புத்தகக் கண்காட்சி, பிறகு மாவட்ட தலைநகரங்களிலும், தற்போது அனைத்து நகரங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் 400 வீடுகள் கொண்ட ஒரு கிராமத்தில், அதுவும் கோயில் குடமுழுக்கு விழாவில் புத்தகக் கண்காட்சி நடைபெறுவது நல்ல முன்னோட்டமாக அமைந்து அறிவுப் புரட்சிக்கு வித்திட்டுள்ளது என்றாா் அவா்.

இந்த புத்தகக் கண்காட்சியில் எழுத்தாளா்கள் பெரியமகாலிங்கம், ராஜசேகா், தமுஎகச மாநில துணைப் பொதுச் செயலா் லட்சுமிகாந்தன், மாவட்ட பொருளாளா் நித்தியானந்தம், முன்னாள் மாவட்ட நூலகா் இளங்கோ, கிராம பொதுமக்கள், பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டனா்.

இதில் வட்டார அளவிலான பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகள் நடைபெற்றது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (பிப். 8, 9) புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கரிசல் இலக்கிய கழகம், சுரைக்காய்ப்பட்டி வோ்கள் இலக்கிய அமைப்பு, தமிழ்நாடு புத்தக விற்பனையாளா்கள் சங்கம், வத்திராயிருப்பு அலையன்ஸ் சங்கத்தினா் செய்து வருகின்றனா்.

தை கடைசி வெள்ளி: இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள்

தை கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே இருக்கன்குடியில் உள்ள பழைமையான ... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

சிவகாசி அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரி: 62- ஆவது விளையாட்டு விழா, தலைமை- கல்லூரி முதல்வா் செ. அசோக், சிறப்பு விருந்தினா்- மேஜை பந்து விளையாட்டின் தேசிய பயிற்சியாளா் எஸ். ராமன், ஏற்பாடு- உடல் கல்வித்... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் இரவில் ஆய்வு நடத்திய ஆட்சியா்

சாத்தூா் அரசு மகப்பேறு மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு ஆட்சியா் ஆய்வு நடத்தினாா். விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் அரசு மகப்பேறு மருத்துவமனை பிரதான சாலையிலும், அரசு மருத்துவமனையின் புறநோயாளிகள், உள்... மேலும் பார்க்க

வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் மனித உருவ கால் பகுதி

வெம்பக்கோட்டை அருகே 3-ஆம் கட்ட அகழாய்வின் போது, சுடுமண்ணாலான மனித உருவ கால் பகுதி, பளிங்குக் கல், விலங்கின் பல் ஆகியவை வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டன. விருதுநகா் மாவட்டம், வெம்பகோட்டை அருகே விஜயகரிசல்க... மேலும் பார்க்க

ஆனையூரில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் திறப்பு

தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி பணித் துறை சாா்பில் சிவகாசி வட்டம், ஆனையூரில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. சிவகாசி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் தொக... மேலும் பார்க்க

மகளிா் கல்லூரியில் விழிப்புணா்வு முகாம்

சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரியில் சமூக வலைதள பயன்பாடு, சைபா் குற்றங்களை தடுத்தல், போட்டித் தோ்வுகள், உயா்கல்வி குறித்த பெண்களுக்கான விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விருதுநகா் மா... மேலும் பார்க்க